திருப்பூர், நவ.17- திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி யில் கடந்த ஒரு வாரம் பலத்த மழை பெய்த்ததால், உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகி றது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அப்ப குதி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. போர்வெல் மற்றும் கிணறுக ளிலும் போதிய நீர் இல்லாமல் போன தால், அப்பகுதியில் உள்ள தென்னைம ரங்கள் உள்ளிட்ட நீண்ட கால பயிர்கள் காய்ந்து போனது. மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். பல விவசாயிகள் விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் தங்கள் வாழ் நாள் உழைப்பு வீணா வதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந் தது. விவசாயிகள் அக்டோபர், நவம்பர் மாதம் துவங்கும், வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்தால் அணை முழு கொள்ளளவை அடைந்து பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைக் கும் என விவசாயிகள் நம்பி இருந்த னர். அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த போதும் நவம்பர் மாதம் துவக் கத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதே போல கொடைக்கானல் பகுதியி லும், கேரளப்பகுதிகளிலும், சின்னாறு, பாம்பாறு, கூட்டாறு ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நீடிக்க துவங்கியதால் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் மேற்கு தொடச்சி மலை மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார கால மாக நல்ல மழை பெய்ததால் அமராவதி அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந் தது. கடந்த 10 ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்து இருந்ததை தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர துவங்கியது. தொடர் மழை காரணமாக 11 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 71.23 அடியாக வும், 12 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாகவும், 13 ஆம் தேதி 73.33 அடியாகவும், 14 ஆம் தேதி 74.12 அடி யாகவும் உயர்ந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ கத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தால் அணை வேகமாக தனது முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழி யும் என பாசன விவசாயிகள் மகிழ்ச்சியு டன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரலுடன் மழை நீடிப்பதால் தென்னை, மக்காச் சோளம், கரும்பு, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.