கோவை, ஜூலை 28- தொழிற்சங்கம் அமைத்ததால் பழிவாங்கல் நடவடிக்கை பல மாவட்டங்களில் நடைபெறுவதாக மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் ஊழி யர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று கோவை கண பதி இன்ஜினியரிங் சங்க அலுவல கத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி தலைமையில் நடைபெற் றது. இதில், மாநிலச் செயலாளர் டி. லட்சுமி, மாநிலப் பொருளாளர் எம். மலர்விழி உட்பட மாநில நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், மக்களை தேடி மருத்து வம் பார்க்கும் ஊழியர்களின் ஊதி யத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். தன்னார்வலர் களை ஊழியராக மாற்ற வேண் டும். இத்திட்டத்தில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதி யம் வழங்க வேண்டும். சில மாவட் டங்களில் தொழிற்சங்கம் துவக்கிய தற்காக பழிவாங்குதல் நோக்கில் செயல்படுவதை கைவிட வேண் டும். மலை மற்றும் கிராம பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவம், போக் குவரத்து உள்ளிட்ட படிகளை வழங்க வேண்டும். ஊழியர்களை கண்ணி யத்துடன் நடத்த வேண்டும். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி செப்டம்பர் மாத இறுதியில் சென்னை தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.