districts

img

அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரச்சார இயக்கம்

சேலம், ஆக.13- அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில், மேட்டூர் அனல் மின் நிலை யம் அருகே பிரச்சார இயக்கம் நடை பெற்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல்  சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறைகளை தனி யாருக்கு விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை விளக்கி, அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு  செவ்வாயன்று பிரச்சாரக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொமுச மேட்டூர் அனல் மின் நிலைய  கிளைச்செயலாளர் எஸ். புகழேந்தி  தலைமை வகித்தார்.  இந்த பிரச்சாரத்தின் நோக்கங் களை விளக்கி தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க மாநிலத் தலைவர் பகுத் தறிவன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் (எச்எம்எஸ்) பொரு ளாளர் வேணுகோபால், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன், ஐஎன்டியுசி மூத்த தலைவர் ஜெயராமன், மின்சார தொழிலாளர் சம்மேளன மாநில இணை  பொதுச்செயலாளர் வி.ராஜேந்திரன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் வீ.இளங்கோ ஆகி யோர் உரையாற்றினர். முடிவில், ஐஎன் டியுசி மாநிலப் பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணி நன்றி கூறினார்.