கோவை, ஜூன் 17- அதிமுக தலைமைக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவரும் வேண்டாம் என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பி னரான அதிமுகவைச் சேர்ந்த ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கி றது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே பலமுறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். தற்போது இருவரும் அணியாக பிரிந்து சண்டை போட்டு கொண்டுள்ளனர். விபத் தின் காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இரு வரும் பதவிக்கு வந்து விட்டனர். அதிமுக சாதி கட்சியாகவும், துரோக கட்சியாகவும் மாறிவிட்டது, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சுத்தமான வர்கள் இல்லை. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வரட்டும். ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவரும் வேண்டாம்.. கட்சிக்காக பேசியதால் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருந்த அன்வர் ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்தே நீக்கப்பட்டார். இப்போது நான் பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கி னால் நீக்குங்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவ ருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. ஜெய லலிதாவே என்னை அழைத்து சீட் வழங்கி னார். சட்டமன்ற தேர்தலில் எனக்கு சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட வேலுமணி பேச வில்லை. பிரதமர் கூறியதால் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என ஓபிஎஸ் வெளிப் படையாக பேசியிருக்கக்கூடாது. நான் அதிமுகவிற்கு எதிராக செயல்படவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மக்கள் தலை வர்கள் கிடையாது. நான் அதிமுகவில் இருக்கின்றேன். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையின் கீழ் இல்லை என்றார். முன் னாள் அதிமுக எம்எல்ஏவின் பேட்டி தற் போது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.