districts

img

வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக வேட்பாளர்கள்

அவிநாசி, பிப்.19- அவிநாசி அருகே ராக்கி யாபாளையம் வாக்குச்சா வடியில் அத்துமீறி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தற்கு திமுக கூட்டணி கட்சியி னர் கடும் எதிர்ப்பு தெரிவித்த தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் சனியன்று நகர்ப்புற  உள்ளாட்சி மன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.  இந்நிலையில் திருப்பூர்  மாவட்டம், அவிநாசியை அடுத்த திருமுரு கன்பூண்டி நகராட்சி 11வது வார்டில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான லதா, ராக்கியா பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி முன்பாக, பாஜகவின் 13வது வார்டு வேட்பாளர் சன் ராஜாவுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இத்தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 16வது வார்டு வேட்பாளர் எஸ்.வெங்கடாசலம், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியினருடன் சென்று காவல்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித் தார். அதனை தொடர்ந்து அதிமுக வேட்பா ளர் லதாவை வெளியே செல்லும்படி காவல் துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும் மற்றொரு பக்க நுழைவு வாயிலில் வாக்குச் சேகரிக்கும் பணியை லதா தொடர்ந்தார். இதையடுத்து அப்பகுதியிலும் திமுக கூட் டணிக் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். இதை யடுத்து அதிமுக வேட்பாளர் லதாவை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத் தனர்.