districts

img

சர்வதேச பெண் வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், நவ. 25 - சேவ் அமைப்பும், திருப்பூர் குமரன் கல்லூரியும் இணைந்து சர்வதேச பெண் வன்முறை ஒழிப்பு தினத்தை அனு சரித்தனர். வெள்ளியன்று குமரன் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி  பிலிப் கொடியசைத்தும், சேவ்,செயல் இயக்குனர். எ.வியாகு லமேரி தலைமையேற்று ஊர்வலத்தை நடத்தினர். இந்நி கழ்வில் 200 பேர் கலந்து கொண்டு பெண் வன்முறை இல்லாத  நகரத்தை உருவாக்குவோம் என கையெழுத்திட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.  சேவ் அமைப்பும், பார்க் கல்லூரியும் இணைந்து சர்வதேச  பெண் வன்முறை ஒழிப்பு தினத்தை அனுசரித்தனர். கல்லூரி  முதல்வர் டி.சரவணன் கொடியசைத்தும், சேவ்,செயல் இயக் குனர். ஏ.வியாகுல மேரி தலைமையேற்று ஊர்வலத்தை நடத் தினர்.  இந்நிகழ்வில் 500 பேர் கலந்து கொண்டு பெண் வன்முறை  இல்லாத நகரத்தை உருவாக்குவோம் என கையெழுத்திட்டு  உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நவ.24-ஆம் தேதி  முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பெண்  வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடத் தப்படும் என்று சேவ் அமைப்பு தெரிவித்துள்ளது.