districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேடபாளையம் யுனிவர்சல் பள்ளி மாணவி 598 மதிப்பெண்கள் பெற்று சாதனை

திருப்பூர், மே 7 – பல்லடம் அருகே சேடபாளையம் யுனி வர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி  ஈ.மகாலட்சுமி பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர் வில் 598 மதிப்பெண்கள் பெற்று சாதனை  படைத்துள்ளார். மாணவி மகாலட்சுமி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் தலா 99 மதிப் பெண்களும், பொருளாதாரம், வணிகவி யல், கணக்குப்பதிவியல், பிசினஸ் மேக்ஸ்  ஆகிய நான்கு பாடங்களில் தலா 100 மதிப் பெண் என மொத்தம் 600க்கு 598 மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் 83 பேர், மாணவிகள் 59 பேர் ஆக மொத்தம் தேர்வெ ழுதிய 142 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி நூறு சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பான்மையாக சுற்று வட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, சாமா னிய வீட்டு மாணவ, மாணவிகளை சேர்த்து  கல்வி கற்பிக்கும் இப்பள்ளி தற்போது மாநில  அளவில் சாதனை படைத்துள்ளது குறிப்பி டத்தக்கதது. இப்பள்ளியின் தாளாளர் இராஜ கோபால் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காலமானார். எனினும் அவ ரைத் தொடர்ந்து அவரது இணையர் சாவித் திரி, மகள் வினோதாரணி ஆகியோர் பொறுப் பேற்று இப்பள்ளியைச் சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர்.

மருத்துவம் படிக்க ஆசை 560  மதிப்பெண் பெற்ற மாணவி விருப்பம்

கோவை, மே 7- கோவையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து 560 மதிப்பெண் பெற்ற ஸ்ரீ ராஜலட்சுமி  என்ற மாணவி மருத்துவம் படிக்க வேண்டும் எனவும், அதற்கு யாராவது உதவி செய்ய  வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள் ளார்.  கோவை தெலுங்குப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டியன் - முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியன்  சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகி றார். முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டு னராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண்  குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீ ராஜ லட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணி கர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் 12ஆம் வகுப்பு உயிரியல் + கணிதவி யல் பாடப்பிரிவில் படித்து வந்தார். இந்நிலை யில் நடைபெற்று முடிந்த பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.  இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறு கையில்,  தான் படிக்க உதவிய பெற்றோர்  மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன். மேலும் மருத்துவராக  வேண்டுமென்பது எனது கனவு. அதற்காக  நீட் தேர்வும் எழுதி உள்ளேன். ஆனால், தந்தை  சுமை வண்டி இழுக்கும் தொழிலாளி, தாய்  லோடு வண்டி ஓட்டுனராக இருப்பதால், தங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாரா வது முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  அதே போல் அப்பள்ளியில் Accounts  பாடப் பிரிவில் படித்த மாணவி செளபாக்கியா  595 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிவில்  சர்விஸ் மேற்கொள்ள இருப்பதாக விருப்பம்  தெரிவித்துள்ளார்.

காட்டுபன்றி தாக்கி மூதாட்டி காயம்

காட்டுபன்றி தாக்கி மூதாட்டி காயம் கோபி, மே 7- ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டி யுள்ள சுண்டக்கரடு மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் சடைச்சி (70). இவர், திங்களன்று அதிகாலை அருகே உள்ள  வனப்பகுதியையொட்டிய பகுதிக்கு சென்றுள்ளார். அப் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றி மூதாட்டியை தாக்கியுள்ளது. இதில், கீழே விழுந்த வர் முகம், கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்  மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வனத்தொட்டியில் தண்ணீரை நிரப்பும் பணி தீவிரம்

ஈரோடு, மே 7- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால்  வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர்  நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வருகிறது. இதனையறிந்த வனத்துறையினர் வனப் பகுதியில் உள்ள வனத்தொட்டியில் டிராக்டர்  மூலம் தண்ணீரை நிரப்ப வேண்டும் என  விவசாயிகள் மற்றும் சூழலியல் ஆர்வலர் கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இத னையடுத்து, வனப்பகுதியில் உள்ள தொட்டி களில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர்  நிரப்பும் பணி நடைபெற்று வருகிற நிலையில்,  தற்போது, கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக ளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வரு கின்றனர்.

சூறைக்காற்றுக்கு சாய்ந்த வாழை மரங்கள்

சேலம், மே 7- தேவூர் பகுதியில் திங்களன்று இரவு வீசிய  சூறைக்காற்றுக்கு 4 ஆயிரம் வாழை மரங் கள் சாய்ந்து சேதமடைந்தன. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த  தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி, பூச்ச மரத்துகாடு, பொன்னம்பாளையம், தண்ணி தாசனூர், காணியாளம்பட்டி, செட்டிப்பட்டி, ஓடக்கரை, அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 10 மாதத்தில் அறு வடைக்கு வரக்கூடிய கதளி, நேந்திரம், தேன் வாழை, மந்த வாழை, செவ்வாழை  உள்ளிட்ட வாழைகளை சாகுபடி செய்துள்ள னர். இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட தோட் டத்தில் தற்போது கடும் வெயிலால் மரங்கள்  நீர்ச்சத்து குறைந்து வாடி வதங்கி பிஞ்சு காய்க ளுடன் சாய்ந்து வந்தது. இதனால் விவசா யிகள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலை யில், திங்களன்று இரவு தேவூர் பகுதிக ளில் திடீரென சூறைக்காற்றுடன் லேசான  மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு  கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பூச்சமரத்துக் காடு பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பல்வேறு வகையான வாழை மரங்கள் சாய்ந் ததில் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந் துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாழை மரங் கள் சாய்ந்ததற்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி இதேபோன்று, அவிநாசி சற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதனால், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி  பகுதியில் 5 ஏக்கருக்கும் மேல் பயிரிட்டி ருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந் தன. இதுகுறித்து, தகவலறுந்து வந்த வரு வாய் துறையினர், தோட்டக்கலைத்துறை யினர், சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்குகும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,  இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய  உள்ள சூழலில், பலத்த காற்றால் வாழை  மரங்கள் அனைத்தும் முறிந்து சேமடைந் துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நிலை உணர்ந்து, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறினர்.

குழந்தை திருமணம்: 2 வருடம் சிறை தண்டனை

சேலம், மே 7- குழந்தை திருமணம் நடைபெ றுவது கண்டறியப்பட்டால், அதில் தொடர்புடைய நபர்களுக்கு 2 வரு டம் சிறை தண்டனை, மற்றும் ரூ.1 லட் சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள் ளார். குழந்தை திருமணங்களை தடுத் தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட் சியர் ரா.பிருந்தாதேவி பேசுகையில்,  குழந்தை திருமணம் செய்யப்படு வதால் குழந்தைகளின் எதிர்கால நல் வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகி யவை கிடைக்காமல் குழந்தைகளின்  முன்னேற்றம் தடைப்பட பெரிதும்  வாய்ப்பாக அமைகிறது. மாவட்ட  அளவில் குழந்தை திருமண தடுப்பு  அலுவலர்களாக மாவட்ட சமூக நல  அலுவலர், மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவ லர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலு வலர்கள் ஆகியோரைக் கொண்ட  குழு செயல்பட்டு வருகின்றது. குழந்தை திருமணம் நடைபெறு வது கண்டறியப்பட்டால் தொடர்பு டையவர்களுக்கு 2 வருடம் சிறை  தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அப ராதமும் விதிக்கப்படும். குழந்தை  திருமணம் தொடர்பான தகவல் களை 1098, 151 என்ற கட்டணமில்லா  தொலைபேசி எண்களில் தெரிவிக் கலாம். மேலும், மாவட்ட சமூக நல  அலுவலரை 0427-2413213, 91500-57631 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம், என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சுகந்தி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, துணை இயக்குநர்  (சுகாதார பணிகள்) சௌண்டம்மாள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

‘சவுக்கு’ சங்கர் மீது சேலத்திலும் வழக்குப்பதிவு
சேலம், மே 7- பெண் காவலர்கள் குறித்து அவதூறாக  பேசிய யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சேலத்தி லும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் ஒரு யூடியூப்  சேனலுக்கு அளித்தப் பேட்டியில், காவல்  துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள்  குறித்து அவதூறான கருத்துகளைத் தெரி வித்துள்ளார். இதற்கு காவல் துறை அதிகா ரிகள் மற்றும் பெண் காவலர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். இந்நிலையில், சவுக்கு சங்க ரின் பேட்டி குறித்து கோவை சைபர் கிரைம்  காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்தப்  புகாரின்பேரில், அவர் மீது பெண்களுக்கு எதி ரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஐபிசி  பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000  பிரிவு 67 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இதையடுத்து தேனியில் இருந்த சவுக்கு  சங்கரை கடந்த மே 4 ஆம் தேதியன்று கோவை  போலீசார் கைது செய்தனா். பின்னர் அவரை  கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நே ர்நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கரை மே 17 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், சேலம் சைபர் கிரைம் காவல் துறையினரும், சவுக்கு சங்கர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சைபர்  கிரைம் பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்  கீதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை  பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல்  தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு  எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவு களின் கீழ், வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியினால் வாழை சேதம்: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 7- தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயி லின் காரணமாக காய்ந்து விழுந்த வாழை  மரங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி விவசாயம் நிறைந்த மாவட்டமா கும். இப்பகுதியில் தக்காளி, வெண்டை, அவரை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளும், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை விவசா யிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நி லையில், கடந்தாண்டு பருவமழை பொய்த்து  போனது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து, விவ சாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர்  இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. இந்நிலை யில், தருமபுரி அருகே உள்ள மூக்கனூர் மற் றும் அக்கமன அள்ளி ஊராட்சியில், சுமார்  நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை நடவு  செய்து விவசாயம் செய்து வருகின்றனர். தற் போது வெயிலின் தாக்கம் 100 மேல் வெயில்  வாட்டி வரும் நிலையில், கிணற்றில் தண்ணீர்  இல்லாமல் சொட்டு நீர் பாசனம் முறையில்  வாழை மரங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந் தனர். சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான  தண்ணீரின்றி வெயிலின் காரணமாக வாழை  மரங்கள் காய்ந்து முறிந்து விழுந்துள்ளன. இன்னும் ஒரே மாதத்தில் அறுவடைக்கு தயா ராக இருந்த நிலையில், சுமார் 5 ஏக்கர் பரப்பள வில் உள்ள வாழை மரங்கள் முறிந்து விழுந்த தால் விவசாயிகளுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய்  வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், வருவாய் துறையினர் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க  வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு

நாமக்கல், மே 7- நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் கண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த விசைத் தறி தொழிலாளி தங்கவேல் (70). இவருடைய மனைவி மல்லிகா (65). இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலை யில், மல்லிகா கடந்த சில  மாதங்களாக உடல் நலமில் லாமல் இருந்துள்ளார். இந்நி லையில், அவரது வீட்டி லேயே அவர் திங்களன்று காலை உயிரிழந்தார். இந்நி லையில், அவரது உடல்  அருகே மிகுந்த மனவருத்தத் துடன் இருந்த தங்கவேலு, மாலை அவரும் உயிரிழந் தார். மனைவி இறந்த அதிர்ச் சியில் கணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இருவ ரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

உதகையில் கூடுதலாக வழிகாட்டி பலகைகள்

உதகை, மே 7- சுற்றுலாப் பயணிகளின் தேவையற்ற அலைச் சலை தவிர்க்கும் விதமாக, உதகையில் கூடுதலாக வழி காட்டி பலகைகள் அமைக்கும் பணியில் போக்குவரத்து  காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு கோடை சீசனான ஏப், மே மாதங்களில் லட்சக்கணக்காண சுற்று லாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இதில் 70 சதவீத சுற்றுலாப் பயணிகள் பொது போக்கு வரத்தை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களில் வரு கின்றனர். இதனால், வெறும் 5 சதுர கிலோமீட்டர் பரப்ப ளவு உள்ள உதகை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கு கிறது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற் கிறது. இதனால் உள்ளூர் மக்கள் அத்தியாவசிய தேவை களுக்கும், சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலாத்தலங்க ளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.  மேலும், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்க ளுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரம் நின்று வழி கேட் கின்றனர். ஒரு சிலர் கூகுள் மேப் பயன்படுத்தினாலும், உள்ளூர் தேவைக்காக ஒரு வழி பாதையாக மாற்றப்படு வது அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அவர்கள்  சாலையில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாத் தலங்க ளுக்கு வழி கேட்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சாலையோரங்களின் முக்கிய சந்திப் புகள் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தளங்களின்  பெயர்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகள் அமைக்கும்  பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது சுற்றுலாப் பயணி களின் தேவையாற்ற அலைச்சல் மற்றும் நெரிசலுக்கு தீர் வுக்கு உதவும் என போக்குவரத்து போலீசார் நம்பிக்கை  தெரிவிக்கின்றனர்.