திருப்பூர், நவ. 27 – நலிவுற்ற திரைப்பட மற்றும் நாடக நடிகர் கள் குடும்பத்தாருக்கு அடுக்குமாடி குடியி ருப்பு அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு திருப்பூர் மாவட்ட திரைப்பட மற் றும் நாடக நடிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. திருப்பூர் மாவட்ட திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.நா கராஜ் தலைமையில் நடிகர்கள், கலைஞர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது: திரைப்பட மற் றும் நாடக நடிகர்களுக்கு குறிப்பாக மாற்றுத் திறனாளி மற்றும் வயதான, நலிந்த சங்க உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகள் பெற்றுத் தருவதற்காக சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினர்க ளாக இருக்கும் நலிவுற்ற திரைப்பட மற்றும் நாடக நடிகர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள குடியிருப்புக ளில் இலவச வீட்டுமனைகளாவோ அல்லது அரசு அடுக்குமாடி குடியிருப்பிலோ வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.