districts

img

கணியூரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு: சார் பதிவாளர் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

உடுமலை, ஆக.19 - பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை  முறைகேடாகப்  பத்திரப்பதிவு செய்த சார் பதி வாளர் தாமோதரன் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் திங்களன்று கணியூர் சார்பதி வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சுமார் நூற்றி  ஐம்பது விவசாயிகளைக் கைது செய்த காவல் துறையினர் தனியார் மண்டபத்தில் சிறை வைத்து பிற்பகல் விடுவித்தனர். கணியூர் பத்திர பதிவுத்துறை அலுவல கத்தில் முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும். சட்டத் திற்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்த அதிகா ரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா  செயலாளர் எம்.எம்.வீரப்பன் தலைமையில் திங்களன்று முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. இதில், மடத்துக்குளம் தாலுகா, கணியூர்  பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலியான ஆவணங்களை கொண்டு அரசு, மற்றும் கோவில் நிலங்கள்  பத்திரப்பதிவு செய்யப்படுவதாக, பல்வேறு  புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனி யார் நிலங்களை போலியான ஆவணம் மற் றும் ஆள் மாறாட்டம் செய்து கணியூர்  பத்திரப் பதிவு அலுவலக சார்பதிவாளர், அதிகா ரிகள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் முறைகேடான விற்பனை  பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.  இதன்படி தூங்காவி கிராமம் பட்டா எண் –  323 யை கணியூர் சார்பதிவக உயில் எண் 67 /BK 111/2006ன் படி மூன்று நபர்களுக்கு சொத் துகள் பாத்தியப்பட்டது என்று பதியப்பட்டுள் ளது. ஆனால்  கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி  கணியூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு  செய்யப்பட்ட பத்திரப் பதிவில் முதல் நபர்  மற்றும் மூன்றாம் நபர் கையெழுத்து இல்லா மல் முறைகேடான விற்பனைப் பதிவு செய்து  உள்ளார்கள். இவ்வாறு பதிவு செய்த நிலத் தின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும்.  இப்படி பல முறைகேடான பதிவுகளை மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரி களின் ஆவணங்களை வைத்து கணியூர் பத்தி ரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்ய  வேண்டும். தவறாக பதியப்பட்ட பத்திரங்க ளை உடனடியாக ரத்து செய்து உரிய நபர்க ளுக்கு தர வேண்டும். தவறு செய்த அனைத்து  அதிகாரிகள் மற்றும் பத்திர எழுத்தாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கடந்த மாதம் 5ஆம் தேதி கணியூர்  பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படாத நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்ட அனைத்து விவ சாய சங்கம் மற்றும் விவசாயிகள், பாதிக்கப் பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையில் உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந் தது. இந்நிலையில் தவறு செய்த சார் பதிவா ளர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல், முறைகேடான பத்திர பதிவுகளை ரத்து  செய்யாமல் இருப்பதைக் கண்டித்து திங்க ளன்று அனைத்து விவசாயிகள் மற்றும் பாதிக் கப்பட்ட பொது மக்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினார்கள். முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  அனைவரையும் காவல்துறை வலுக்கட்டய மாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். முன்னதாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, ராஜகோபால், மடத்துக்கு ளம் தாலுகா தலைவர் ராஜரத்தினம், நிர்வாகி கள் அழகேசன் மற்றும் வெள்ளியங்கிரி, ஜோத்தபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செந் தில்குமார், விவசாயிகள் தர்மராஜ், கணேஷ்  உள்ளிட்ட பல நூறு பேர் முற்றுகை போராட் டத்தில் கலந்து கொண்டனர். பத்திரப்பதிவு விவகாரத்தில் தவறிழைத் தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிய ளித்ததாக இப்போராட்டத்தில் பங்கேற்ற விவ சாயிகள் தெரிவித்தனர்.