உதகை, ஜூன் 14- உதகை - கோத்தகிரி சாலையில் உலாவும் குதிரைகளால் சாலை விபத்து ஏற்பட்டு, காயங்களுடன் இருவர் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் குதிரை, மாடு, வளர்ப்பு எரு மைகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், கால்நடைகளின் உரிமையாளர்கள் இதனை கண்டு கொள்ளா மல் தங்களது வளர்ப்பு கால்நடைகளை சாலையிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவ்வப்போது வாகன விபத்து ஏற்படுவதோடு, சாலையில் நடந்து செல்பவர்களும் பெரி தும் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் சாலையில் உலாவும் வளர்ப்பு கால் நடைகளால் பெரும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். குறிப் பாக தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் சாலை, கோத் தகிரி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை என முக்கிய சாலைகளில் குதிரை, மாடு, வளர்ப்பு எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் உலா வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற் படுவதோடு, அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் பிரதான சாலையில் குதிரை ஒன்று திடீரென குறுக்கே வந்த தால், அச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் குதிரை மீது மோதி நிலை தடுமாறி, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும், அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சாலையில் உலா வரும் குதிரை, மாடு, வளர்ப்பு எருமை உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர் களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதித்து நடவ டிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்கள் குறை யும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.