சேலம், செப்.24- ஓமலூர் அருகே தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, மலை பெரு மாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி (50). இவரது மகன் மற்றும் கணவர் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், குமாரி மட்டும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார். குமாரி அருகில் வசித்து வரும் நீலா என்ப வரது வீட்டிற்கு தினமும் டி.வி. பார்க்க சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்க ளாக குமாரி நீலா வீட்டிற்கு டி.வி. பார்க்க செல்லவில்லை. மேலும், குமாரியும் வீட்டி லிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் திங்களன்று காலை குமாரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப் போது அவர் வீட்டிற்குள் கொலை செய்யப் பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதைபார்த்து அதிர்ச்சிய டைந்த அவர்கள், இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், ஓமலூர் துணை காவல் கண்காணிப் பாளர் சஞ்சய் குமார், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபு ணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதன் பின் போலீசார் குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரி சொத்து தகராறில் கொலை செய்யப் பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே, அண்மை காலமாக தனி யாக வசித்து வரும் முதியவர்களை கொலை செய்து, அவர்களது வீட்டிலிருக்கும் நகை மற் றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகி றது. அதன்ஒருபகுதியாக இச்சம்பவம் நடை பெற்றுள்ளதா? என்பது கேள்விகளை எழுப்பி யுள்ளது.