மேட்டுப்பாளையம், செப்.3- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியில் செயல் படாமல் மூடப்பட்டு கிடக்கும் தொழிற் சாலைக்குள் முகாமிட்டு இருந்த காட்டு யானையொன்று அங்கிருந்து வெளியேறி ஊருக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்கள் யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகா என மூன்று மாநில வனப் பகுதியை இணைக்கும் வலசை பாதை என்ப தால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானை கள் கடந்து செல்வது வழக்கம். வலசை காலங் களில் நூற்றுக்கணக்கான யானைகள் இவ் வழியே இடம் பெயரும் போது ஒரு சில யானைகள் உணவும், நீரும் ஓரிடத்தில் கிடைத்தால் அங்கேயே சில காலம் தங்கி விடுவதும் உண்டு. இவை காட்டு யானை களுக்கே உண்டான இயல்பிற்கு மாறாக இயற்கையான வன தீவனங்களை தவிர்த்து விட்டு விவசாய பயிர்களை உண்டு பழகி விட்ட “கிராப் ரைடர்ஸ்” வகை யானைகள் என வனத்துறையினர் அழைக்கின்றனர். இந்நிலையில், சிறுமுகை பகுதியில் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பழைய விஸ்கோஸ் ஆலையில், 10க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. அடர்ந்த வனத்தை ஒட்டி பவானி ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த இந்த ஆலை பல்வேறு காரணங்களினால் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. தற் போது ஆலையில் புதர்மண்டி, ஆள் நட மாட்டம் இல்லாத வளாகத்தினுள் யானை கள் முகாமிட்டுள்ளன. இவை பகல் நேரங் களில் ஆலைக்குள் வளர்ந்துள்ள முட்புத ருக்குள் ஓய்வெடுத்துவிட்டு இரவு நேரங் களில் ஆலையின் உடைந்த சுவற்றின் வழியே வெளியேறி அருகில் கிடைக்கும் உணவு களை உட்கொள்கின்றன. இந்த நிலையில், ஞாயிறன்று காலை ஒற்றை ஆண் காட்டு யானை தொழிற்சாலை யிலிருந்து வெளியேறியது. இதனை மீண்டும் ஆலைக்குள்ளேயே விரட்டும் முயற்சி வீணான நிலையில், யானை சிறுமுகை நகர சாலைக்கு வந்து விட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானையை விரட் டினர். இதனால் யானை மீண்டும் முகா மிட்டுள்ள தொழிற்சாலைக்குள் சென்றது. மூடப்பட்டு கிடக்கும் தொழிற்சாலைக் குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத் திற்குள் அனுப்பி வைக்க வனத்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் தினசரி இது போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதாகி விடும் என இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.