கோவை, நவ.23- தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட் டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளை சோகத்திற்குள்ளாக்கி யுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்து கெம்பனூர் பகுதி வனப்பகுதியாக உள்ளதால், வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு அட்டுக்கல் வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, கெம்பனூர் பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை, தோட்டங்களில் பயிரிடப்பட்ட சோளம், தக்காளி செடிகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இதன் பின் அங்கிருந்து சென்ற யானை, கதிரவன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட் டத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்த அப் பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்தனர். சிறிது நேரத் திற்கு பிறகு யானை அங்கிருந்து வனத் திற்குள் சென்று விட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அடிக்கடி யானை ஊருக்குள் வருவதால் நாள்தோறும் உயிர் பயத்தி லேயே வாழ்த்து வருகிறோம். யானை ஊருக் குள் நுழைவதை தடுக்க 2 வருடங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் சைரன் வைக் கப்பட்டது. ஆனால், இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மேலும் மருதமலை, ஓணாப்பாளையம், அட்டுக்கல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங் களில் வனத்துறைனர் ரோந்து பணியில் ஈடு படுவதில்லை. எனவே, யானையை கண் காணிக்க வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானை வரு வதை எச்சரிக்கும் சைரனை செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.