உதகை,ஜன. 18- மஞ்சூர் பஜாரில் ‘ராஜநடை’ போட்டு உலா வந்த காட்டு மாட்டை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்ப டுகிறது. இந்நிலையில் செவ்வாயன்று மாலை மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவ ரத்துத்தும் அதிகமாக காணப்பட்டது. அப்போது கண்டி பிக்கை சாலையில் இருந்து வந்த ராட்சத காட்டு மாடு ஒன்று பஜாருக்குள் ராஜநடை போட்டு வந்தது. திடீரென காட்டு மாடு எதிரே வருவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்நி லையில் பொதுமக்கள் மற்றும் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாத காட்டு மாடு, மேல்பஜார் அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக கடைகள், குடியிருப்பு வழியாக சாலையில் நடந்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒற்றையடி பாதை யில் இறங்கி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.