திருப்பூர், ஜூலை 1 - ஆன்லைன் மூலம் கடன் கொடுத்து, அதிகப்படியான தொகையை செலுத் தும்படி, நூதன முறையில் மோசடி செய் யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கு மாறு பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளார். திருப்பூர் சென்னிமலைபாளையம், அம்பிகை நகர், கருப்பராயன் கோயில் பகுதியில் வசித்து வரும் ச.கனகராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழனன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள பையிங் அலுவல கத்தில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக வேலை செய்து வருகிறேன். முகநூ லில் கிரிடிட் பாக்ஸ் என்ற கடன் கொடுக் கும் செயலி விளம்பரத்தைப் பார்த்து, அதை எனது அலைபேசி கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தேன். அதன் மூலம் கடன் கேட்டு விண்ணப்பித் தேன். எனது ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை யும் அந்த செயலி மூலம் பதிவேற்றம் செய்தேன். எனது விபரத்தின் அடிப்ப டையில் எனக்கு ரூ.7 ஆயிரம் கடன் தருவதாக காட்டப்பட்டது.
இதைய டுத்து எனது கோடக் மகேந்திரா வங்கிக் கணக்கிற்கு கடந்த ஜூன் 21ஆம் தேதி ரூ.7 ஆயிரம் செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஜூன் 28ஆம் தேதி கடன் தொகை மற்றும் வட்டியு டன் ரூ.12,566 செலுத்த வேண்டும் என்று அந்த செயலியில் இருந்து ஓர் அறிக்கை வந்தது. ஆனால் என்னால் ஒரு வாரத் தில் ரூ.5 ஆயிரம் வட்டி செலுத்த முடி யாது என்று மறுப்புத் தெரிவித்தேன். எனினும் அவர்கள் நான் பணம் செலுத் தித்தான் ஆக வேண்டும் என வற்புறுத்தி னர். அதன்பிறகு நான் பெற்ற கடன் தொகைக்கு ரூ.8ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டினர். மேலும் எனது செல்போன் தொடர்பில் உள்ள எண்களை ஹேக் செய்து எடுத்து அதில் எனது படத்தை மார்ப்பிங் செய்து நிர்வா ணப் படமாக அனுப்பப் போவதாகவும், எனவே பணத்தை உடனே செலுத்தும்ப டியும், இல்லையேல் தற்கொலை செய்து கொள் என்றும் மிரட்டினர். இது போல் நூதன முறையில் பணம் பறிக் கும் கும்பல் கடனுக்கு அதிக வட்டி வசூலிப்பதும், கடன் செலுத்திய பிறகும் கூடுதல் தொகை கேட்பதும், பணம் அனுப்பாவிட்டால் தொடர்பில் உள்ள எண்களுக்கு மார்ப்பிங் செய்த படத்தை அனுப்புவதாக மிரட்டுவதும் தொடர்கி றது. எனவே இது போன்ற கும்பல் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.