நாமக்கல், ஜன.2- திருநகர் காலனி, இந்திரா நகர் பகுதி யில் 30 ஆண்டு கால பிரச்சனையை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 36 லட்சம் மதிப் பில் குழாய்கள் அமைக்கும் பணிகள் துவங்கி யது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநகர் காலனி, இந்திரா நகர் பகுதியில் சுமார் 750 வீடுகள் உள்ளது, இங்கு கடந்த 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த சாக்கடை நீர் தேங்கும் பிரச்சனையை தீர்க்கும் வகையில், கால்வாய் அமைக்கும் பணிக்கு நமக்கு நாமே திட்டத்தில் 36 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது இந்த பணி களுக்கு நவீன கருவிகளை கொடுத்த பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்கு னர் பரந்தாமன், எஸ்பிகே கல்வி நிறுவனங் களின் சேர்மன் பிரபு குமார்,உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் திருச்செங்கோடு எம்எல்ஏ அறிவுறுத்தினார்.