தருமபுரி, ஆக.21- அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் பழங்குடியினப் பெண் அன்னதா னம் வழங்க சாதி ஆதிக்கவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம் மன் கோவில் தேர் திருவிழா தற்போது நடை பெற்று வருகிறது. தேரோட்டம் நடைபெறு வதற்கு முன்பாக இக்கோவிலில் கொடி யேற்றத்திற்குப் பின்பு, தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்குவது வழக்கம். இதனி டையே, இந்து சமய அறநிலைத்துறை கட் டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவிலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒரு வர், நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் அன்னதானம் வழங்குவதற்காக சமையல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த சாதி ஆதிக்கவாதிகள், நீங்கள் யார்? எந்த ஊர்? என்று விசாரித் துள்ளனர். அப்போது, அப்பெண் பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த சாதி ஆதிக்கவாதிகள், “நீங்கள் எல்லாம் இன்றைக்கு அன்னதானம் வழங்கக் கூடாது” என தெரிவித்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் சாதி ஆதிக்கவாதிக ளுக்கு ஆதரவாக, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் சமையல் செய்யும் இடத் திற்கு சென்று, எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் எரிவாயுவை அணைத்தனர். பின்பு அவர்களை கோவிலுக்குள் நுழையக் கூடாது, என தெரிவித்து, காவல் துறையினர் வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்கள் அனைத்தையும் காவல் துறை யினர் அடாவடி செய்து வாகனத்தில் ஏற்றி யுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், இருளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நான், திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை இல்லாததால், இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது. அதற்கு பரிகாரமாக இக்கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர், பழங்குடியின பெண்ணான நீங் கள் அன்னதானம் வழங்கக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர். அங்கு வந்த போலீ சாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல் பட்டனர். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறி யும் போலீசார் எங்களை கோவில் பகுதி யில் இருந்து வெளியேற்றி விட்டனர். அற நிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலில் இதுபோன்ற சாதிய பிரச்சனைகள் வருடந்தோறும் ஏற்படுகிறது. இதனை அரசு நடவடிக்கை மேற்கொண்டு, அடாவடியில் ஈடுபட்ட காவல் துறையினர் மீதும், அன்னதானம் வழங்குவதற்கு தடை யாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறை யினர் கூறுகையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வ தற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடு மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றனர். இதைத்தொடர்ந்து அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.