districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

உதகை, அக்.26- கூடலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக் காக கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தனர்.  இந்நிலையில், ராஜகோ பாலபுரம் பகுதியில் காவல்  துறையினர் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த  ஆட்டோ, காரை நிறுத்தி  சோதனை மேற்கொண் டனர். அதில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நடை பெற்ற விசாரணையில்,  வேடன்வயல் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (40) என் பவர் கர்நாடக மாநிலத் திலிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்தது  தெரியவந்தது. இதை யடுத்து, தேவராஜை காவல்  துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த ஆயிரத்து 145 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

சேலம், அக்.26- சேலம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொத்துக் காக கொலை செய்து விட்டதாகக்கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் புகார ளித்தனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி யினர் பழனிச்சாமி - மல்லிகா. இவர்களுக்கு நேகா என்ற மகளும், நந்த கிஷோர் மகனும் உள்ளனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் பகுதியில் மளிகை கடை அமைக்க கட்டுமானப் பணிகளுக்கு செங்கல்  ஏற்றி வர பழனிச்சாமி, அவரது மனைவி மல்லிகா ஆகி யோர் சென்ற போது இருவரும் சாலை விபத்தில் உயிரி ழந்தனர்.  இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து பழனிச் சாமியின் சகோதரி சாந்தி என்பவர் பழனிச்சாமியின் மகள்  மற்றும் மகனுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில், தனது தம்பியான பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் விபத்தில் உயிரிழக்க வில்லை. தனது உறவினர்களான நான்கு பேர்  சொத்துக் காக திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி  புகார் அளித்தார். மேலும், தற்போது தனது அரவணைப்பில் இருக்கும் பழனிச்சாமியின் பிள்ளைகளையும் சொத்துக் காக மிரட்டி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சாந்தி வலியுறுத்தி உள்ளார்.

தக்காளிக்கு காப்பீடு

திருப்பூர், அக். 26 - 2022 - 2023 ஆம் ஆண்டு  தக்காளி, வெங்காயம் உள் ளிட்ட ராபி பருவ தோட்டக் கலை பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமய வங்கி கள் மூலம் நடைபெறும் இந்த  காப்பீட்டு பதிவில் விவசாயி கள் தங்கள் தோட்டக் கலை  பயிர்களை காப்பீடு செய்து கொள்ளும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கேட்டுக் கொண்டுள் ளார். 

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

உதகை, அக். 26- உதகையில், அரசு  பள்ளியில் குழந்தை களுக்கான நலத்திட்ட உதவி கள் சீருடை மற்றும் கற்றல், உபகரணங்கள் பொருள்கள் வழங்கப்பட்டது.  ஊட்டியில் சமூக கடமை  பங்களிப்பை உறுதி செய்யும்  விதமாக சென்னையில் உள்ள காகினி சென்ட் மென் பொருள் நிறுவனம் சார்பில், கோவை காகினி சென்ட் அவுட் ரீச் அமைப்பின் தூரிகை அமைப்புடன் இணைந்து பள்ளிக் கல்வித்  துறையின் கீழ் இயங்கும் மிளிதேன் அரசு உயர் நிலைப்பள்ளியில் இவ் விழா நடைபெற்றது.  இதில், காகினி சென்ட் அவுட் ரிச் அமைப்பின் தலை வர் பாலா, கோத்தகிரி மிளி தேன் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் தூரிகை  அமைப்பு ரஞ்சித் உள் ளிட்டோர் பங்கேற்றனர். 

வஉசி உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு

கோவை, அக்.26- கோவையிலுள்ள வஉசி உயிரியல் பூங்காவின் அங்கீ காரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போ துள்ள உயிரினங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க பூங்கா  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் வஉசி உயிரியல்  பூங்கா உள்ளது. கடந்த 1965 ஆம் ஆண்டு இப்பூங்கா உரு வாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை இந்த உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பரா மரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறு பாடு துறையின் கீழ் செயல்படும் உயிரியல் பூங்கா ஆணையம்  கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகா ரத்தை ரத்து செய்தது. இதனால், கடந்த சில  மாதங்களாக வஉசி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வஉசி பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க பூங்கா நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறு கையில், கோவை வஉசி பூங்காவில் உள்ள உயிரினங்கள் நலமுடன் உள்ளதாகவும், அவற்றிற்கு தேவையான அனைத்து வகையான உணவுகளும் தங்கு தடையின்றி வழங்கப்படுவதாகவும், எனினும் விலங்குகளுக்கு ஒரு  குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊட்டச்சத்து மிக்க உணவு கள் வழங்குவது விலங்குகளின் நலனை மேலும் மேம் படுத்தும் எனவும் தெரிவித்தனர். மேலும், பூங்காவில் உள்ள  விலங்குகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஒரு வார   காலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர்.

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி, அக்.26-  ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந் துள்ள நிலையில், 16 நாட்களுக்கு பின்பு புதனன்று பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை  விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை யால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1 லட் சம் கனஅடிக்கும் மேல் அதிகரித்தது. இத னையடுத்து இங்குள்ள மெயினருவி, ஐந்த ருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டியது. இத னால் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவி களில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொது மழை தணிந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் செவ்வாயன்று 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து புதனன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 20  ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இத னால் அருவிகளில் நீரின் அளவு குறைந்துள் ளது. இதன் காரணமாக, 16 நாட்களுக்கு பிறகு  ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவி களில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை  புதன்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து சரியத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க் கிழமை காலை 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 30 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. புதன்கிழமை காலை 8மனியளவில் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் காலை 9.30  மணியளவில் நீர்வரத்து 24 ஆயிரம் கன அடி யாக சரிந்துள்ளது. அணையில் இருந்து திறக் கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,000 கனஅடியும், உபரி  நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 2,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு  வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு  93.47 டிஎம்சியாக உள்ளது.

சிறுபான்மை மாணாக்கர் கல்வி உதவித்தொகை  விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

திருப்பூர், அக்.26- தமிழகத்தில் இந்திய அரசால் சிறுபான்மை இன மாண வர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண் ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை  பயன்படுத்தி சிறுபான்மை இன மாணவர்கள் விண்ணக் பிக்கும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜைன மற்றும் புத்த மதத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களிலும் படிக்கக்கூடியவர்கள் 2022 -2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலு வோர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத் தில் அக்.31 ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள் ளது. மேலும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முது கலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு  பள்ளி  மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும்  தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில்  புதியது மற்றும் புதுப்பித் தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவ, மாணவி யர்கள் மேற்படி இணையதளத்தில் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி பலி

நாமக்கல், அக்.26- கரூர் மாவட்டம், கவுண் டன்புதூரைச் சேர்ந்தவர் சின்னசாமி (68). விவசாயி யான இவர் திங்களன்று கோவிலுக்கு செல்வதற்காக கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக் கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி வேலூர் அருகே கீழ் சாத்தம் பூர் பிரிவு சாலையில் திரும் பும் போது, பின்னால் அதி வேகமாக வந்த கார் சின்ன சாமியின் வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைய டுத்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த பெங்களூரை சேர்ந்த நிரேஜ்குமார் மிஸ்ரா (43) மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். 

ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் மீட்பு

உதகை, அக்.26- உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியில் ரூ.1 கோடி  மதிப்புள்ள 2 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த்துறை யினர் மீட்டனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது? என்று வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.  மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அளவீடு  செய்யப்பட்டு அங்கு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால்  அவையும் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி உதகை வட்டத்திற்குட் பட்ட நஞ்சநாடு-2 மற்றும் குருத்துக்குளி என்னும் இடத் தில் ஓடை புறம்போக்கு நிலம் என்ற வகைப்பாட்டில் உள்ள  2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட் டது.  இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணி கள் ஏதுவும் மேற்கொள்ளக்கூடாது. அதிலிருந்து வெளியேறு மாறும், வருவாய்த்துறை சார்பில் எண், 7 மற்றும் 6 ஆகியோ ருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வெளி யேறவில்லை.  இதைத்தொடர்ந்து  உதகை கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளங் கோகிலகுரு, கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர். அப்போது ஆக்கிர மிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு, நீர் நிலை புறம்போக்கு என்ற பதிவினை கொண்ட அரசுக்கு சொந் தமான இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளது. இதில் அத்துமீறி யாரும் நுழைய கூடாது. மீறு பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

பீர் பாட்டிலால் நடத்துனர் மீது தாக்குதல் - 2 பேர் கைது

உதகை, அக்.26- நீலகிரி மாவட்டம், உதகை எச்.பி.எப்.பகுதியை சேர்ந்த வர் போரன் (44). மினி பேருந்து நடத்துனரான இவர் உதகையிலிருந்து பிங்கர் போஸ்ட் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்ற வாறு இருந்தார். இதைத்தொடர்ந்து போரன் அவரைப் படியை விட்டு மேலே ஏறி பாதுகாப்பாக பயணம் செய்யு மாறு கூறினார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் ஒரு கட்டத்தில் தனது நண்பர்களை வரச் சொல்லி பிங்கர் போஸ்ட் பகுதிக்கு பேருந்து சென்ற போது அதனை போரனை பீர் பாட்டி லால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த போரனை பஸ்சில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுகுறித்து உதகை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நடத்துனரை தாக்கியது உதகை வி.ஜி.ராவ் கால னியை சேர்ந்த பிராங்க் (24), ஆனந்த் (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

விபத்தில் பலியானவரின் உடலை தகனம் செய்ய மறுத்த ஜமாத்துகள்

கோவை, அக்.26- கோவை ஈஸ்வரன் கோயில் வீதி யில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரி ழந்த ஜமேஷா முபீன் என்ற நபரின் உடலை, மக்களின் அமைதிக்கு ஊரு விளைவிக்க முயன்ற தகவல் வெளி வருவதால் முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத்துகள் மறுத்துள்ளனர்.  ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ரஸ் குண்டுகள், இரண்டு  சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற் றன. இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவவியான வேதியியல் மூலப்பொருட்கள் கைபற்றப்பட்டன. பலியான முபீன் உடல் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு அவர் மனைவி யிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை அடக்கம் செய்ய முயன்ற நிலையில் கோவையிலுள்ள ஜமாத்துகள் முன்வர வில்லை. சதி வேலைக்கு திட்டம் தீட்டிய தனால் மூபின் உடலை அடக்கம் செய்ய மறுத்திருக்கின்றனர்.  கோவையில் அனைத்து ஜமாத்து களுக்கும் அமைதியை விரும்புவதால், சமூக விரோத செயலுக்கு திட்டமிட்ட முபீன் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் போலீசாரின் தொடர் வலியுறுத்தலின்பேரிலும்,  மனிதாபிமான அடிப்படையில் முபின் உடலை பூமார்க்கெட்டையடுத்த பகுதி யில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்திருக்கின்றனர்.  அமைதியை ஜாமாத்துகள் விரும்புவதனால் பயங் கரவாத செயலுக்கு துணை போகின்ற  நபர்களை ஆதரிக்க கூடாது என்ற அடிப் படையில் முபின் உடலை அடக்கம்  செய்ய மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த செயல் பயங்கரவாத செயலில் ஈடுபடும் நபர்களை நல்வழிப்படுத்தும் என்று ஜமாத்துகள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்.