districts

பிரபல மருத்துவமனையில் ஒருவர் அடித்துக் கொலை: உறவினர்கள் ஆவேசம்

கோவை, மே 29- கோவையிலுள்ள தனியார் மருத்துவ மனை வளாகத்தில் திருட வந்ததாகக்கூறி, ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்ப வத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கோவை - அவிநாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் (KMCH) மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுமானப் பணிகளுக் காக வைக்கப்பட்டிருந்த இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை திருடியதாக திங்க ளன்று, ராஜா என்பவரை மருத்துவமனை காவலாளிகள் மற்றும் ஊழியர்கள் தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் ராஜா பலத்த  காயமடைந்தார். கோவை, காந்திமாநகரைச்  சேர்ந்த பகுதியைச் சேர்ந்த மணி (எ) ராஜா  மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாக கூறப்படுகின் றது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி  ராஜா திங்களன்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேஎம் சிஎச் மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன் மற்றும் மருத்துவமனை ஊழி யர்கள், காவலாளிகள் என ராஜவை கடுமை யாக தாக்கிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே உயிரிழந்த ராஜாவின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததாகவும், அவரது பிறப்புறுப்பு உட்பட பல்வேறு இடங்களில் காயம் இருந்த தாக அவரது மனைவி மற்றும் உறவினர் கள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவான  விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும்,  இல்லையெனில் உடலை வாங்கப்போவ தில்லை எனவும் தெரிவித்தனர். ராஜாவின்  உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர்  ராஜாவின் மனைவி மற்றும் வழக்கறிஞர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்பொழுது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் திருப்திகா ரமாக இல்லை எனவும், நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறி அவ ரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி,  முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது குறித்தும், போலீஸ் விசாரணையில் வழக்குப்பிரிவுகள் மாற்றப்பட்டு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். எனினும் காவல் துறையினர் மருத்துவமனையில் ராஜா சென்றபோது இருந்த கடைசி நேர கண்காணிப்பு கேமரா காட்சிகளை தங்களிடம் காட்டும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.