திருப்பூர், ஜூன் 10 – திருப்பூர், அணைப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ள பாலத்தில் வாகன ஓட்டிகள் ஆபத் தான முறையில் சாகசப் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. விபத் துகள் ஏற்படுவதைத் தடுக்க நெடுஞ் சாலை துறை நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் கல்லூரி சாலையில், அணைப்பாளையத்தில் இருந்து வடக்கே ரயில்வே பாதை மற்றும் நொய் யல் ஆற்றை கடந்து தெற்கே மங்கலம் பாதைக்கு செல்லும் வகையில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக அரசு பொறுப் பேற்றபோது, அப்போதைய நெடுஞ் சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமி நாதன் இந்த மேம்பாலத்திற்கு அடிக் கல் நாட்டினார். அணுகு சாலை அமைப்பதில் அப்ப குதி குடியிருப்புவாசிகளிடம் முன்கூட் டியே ஒப்புதல் பெற்று தீர்வு காணாமல் பாலம் பணியைத் தொடங்கியதால் பிரச்சனை ஏற்பட்டது. ஒருசாரர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலை யில் பணியானது முடங்கியது. அடுத்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத் தில் இந்த பாலப்பணி கண்டு கொள்ளா மல் கிடப்பில் போடப்பட்டது. 2021ஆம் ஆண்டு தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த அணைப்பாளையம் பாலம் உள்பட திருப்பூரில் நிலுவையில் உள்ள பாலங் கள் அனைத்தும் முழுமைப்படுத்தி மக் கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித் திருந்தார். எனினும் இந்த அரசு பொறுப் பேற்று இரண்டாண்டு காலம் ஆகியும் போதிய வேகத்தில் பணிகள் நடை பெறாமல் உள்ளது.
அதே சமயம் இந்த பாலத்தின் ஒரு பகுதியாக நொய்யல் ஆற்றின் குறுக்கே காங்கிரீட் பாலம் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. ரயில் பாதையின் குறுக்கே பாலம் அமைத்து அதை நொய்யல் ஆற்று மீதுள்ள பாலத்துடன் இணைக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே நொய் யல் ஆற்றைக் கடந்து செல்ல ஏற்கெ னவே பயன்பாட்டில் இருந்த தரை மட் டப் பாலம் பகுதியில் குழாய்கள் அமைப் புப் பணியால் வாகன ஓட்டிகள் செல் வது தடை செய்யப்பட்டது. இதனால் நொய்யல் மீது முழுமைப் படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறமும் மண்ணைக் கொட்டி சறுக்குப் பாதை போல் ஏற்ப டுத்தி, பயணிகள் பயன்பாட்டுக்கு அனு மதிக்கப்பட்டது. இருசக்கர, நான்கு சக் கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங் களும் இந்த தற்காலிக பாதை வழியா கவே சென்று வர வேண்டி உள்ளது.ஆனால் பாலத்தின் இருபுறமும் உள்ள மண் பாதை சீராக மட்டப்படுத்தப்படா மல் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் காங்கிரீட் பாலத்துடன் இணை யும் பகுதியில் ஒரே மட்டமாக இல்லா மல் சுமார் 1 அடி அளவுக்கு ஏற்றத் தாழ்வாக பெரிய இடைவெளி உள் ளது. ஏற்கெனவே மண் குன்றில் வாக னத்தை ஓட்டி வருவது பெரும் சிரமம். அத்துடன் காங்கிரீட் பால இணைப்பு தடுப்பு அரண் போல் இருப்பதால் பெண் கள் உள்பட ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறிச் செல்வதும், சிலர் கீழே விழுந்து விபத்தில் சிக்குவ தும் நடைபெற்று வருகிறது. பனியன் கம் பெனிகளுக்கு வாகனங்களில் சரக்கு கள் கொண்டு செல்வோர் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களில் பள்ளிக ளுக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர், கல்லூரிக்குச் செல்லக்கூ டிய மாணவிகள் என பலரும் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தை கடப்பது பெரும் சவாலாக, ஆபத்தானதாக உள்ளது.முழுப் பாலம் பணியையும் விரைந்து முடிப்பதுதான் இந்த பிரச்சனைக்கு நிரந் தரத் தீர்வாக அமையும். அதேசமயம் மாற்றுப்பாதை ஏற்பாடு இல்லாமல் நொய்யல் பாலத்தின் மீது மண் குன்று களில் பயணம் செய்யும் நிலையில் பய ணிகள் சிரமப்படுவதைப் பற்றி நெடுஞ் சாலைத் துறை கிஞ்சித்தும் கவலைப்ப டுவதாகத் தெரியவில்லை.