districts

img

குடிநீர் கிணற்றில் கழிவு நீர் கலப்பு: தனிநபருக்கு வளைந்து கொடுக்கும் நகராட்சி

உதகை, செப். 17- சாக்கடை கால்வாயை தனிநபர் ஒரு வர் அடைத்துள்ள நிலையில், கழிவு நீர் வெளியேற வழியின்றி குடிநீர் கிணற் றில் கலப்பதால் தொற்று நோய் அபா யம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த எந்த  கவலையுமின்றி நெல்லியாளம் நக ராட்சி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட எம்ஜி ஆர் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு  கால்வாய் வசதியை நெல்லியாளம் நக ராட்சி செய்து தரப்படவில்லை. மக்க ளின் தொடர் போராட்டத்திற்கு பின்பு,  வாக்குறுதி கொடுத்தோடு சரி இது வரையில் கழிவுநீர் வடிகால் வசதியை செய்து கொடுக்கப்படவில்லை.  இந்நிலையில், இப்பகுதியில் செல் லும் கழிவுநீர் வழியை மறித்து தனி நபர் ஒருவர் தன்னுடைய சுயநலத்திற் காக தடுப்பு சுவர் அமைத்துள்ளார். இத னால், அங்குள்ள குடியிருப்புகள் முன்பு  ஆறு போல ஓடுகிறது. மேலும், குடிநீர் கிணற்றில் இந்த கழிவு நீர் கலந்து வரு கிறது. இதனால் நோய் தொற்று பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, கடந்த ஜனவரி  மாதம் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர் நகராட்சியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அன்றைக்கு கூடலூர் கோட் டாட்சியராக இருந்த முகமது குதிரத் துல்லா, நகராட்சி ஆணையாளராக இருந்த குமரி மன்னன், தேவலா காவல்  துணை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் நகர் மன்றத் தலைவர் சிவ காமி ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில்,  எம்ஜிஆர் நகரை சார்ந்த பொதுமக்க ளும் கலந்து கொண்டனர். அவர்கள் குடி நீர் கிணற்றிற்குள் கழிவுநீர் கலக்கின் றது என்கிற அடிப்படையில் கழிவுநீர்  கலந்த குடிநீரையும் பாட்டிலில் அடைத்து  எடுத்து வந்து நகராட்சி ஆணையர் மற் றும் கோட்டாட்சியரிடம் காட்டினர். கோட்டாட்சியர் அவர்கள் இரண்டு நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என்கின்ற உறுதியை அளித்தனர். ஆனால் தற்போதைய நாள் வரையில்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதற்கிடையில், நாடாளு மன்ற தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட  போராட்ட அறிவிப்பை செய்த பின்னர்,  அதிகாரிகள் மீண்டும் வந்து சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. தனிநபர் ஒருவருக்காக நெல்லியாளம் நகராட்சி வளைந்து கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு இதுவரையில் நகராட்சியிடம் இருந்து எந்த மறுப்பும் இல்லாத நிலையில், தொடர் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என்றனர். இதன்தொடர்ச்சியாக, வருகிற வியாழனன்று (நாளை) பந்தலூர் வட் டாட்சியர் அலுவலகத்தின் முன் தங்கள்  குடும்பங்களுடன் தர்ணா போராட்டத் தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.