districts

img

தில்லி போராட்டத்தில் உயர்நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம்

தருமபுரி, ஆக.9- தில்லி போராட்டத்தில் உயர் நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில், விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண் டும். விவசாயிகளின் கடன்கள் முழு வதையும் தள்ளுபடி செய்ய வேண் டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 200 நாட்கள் வேலை யும், ரூ.600 தினக்கூலியும் வழங்க வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்கக்கூடாது. விவசாய இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக் காமல், மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வேளாண் பயிர்களுக்கும், கால்நடைகளுக் கும் விரிவான காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதந்தோ றும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலம் கையகப்ப டுத்தல் சட்டம் - 2013 அடிப்படையில், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வனவிலங்கு கள் தொல்லையிலிருந்து விவசாயி களை பாதுகாக்க வேண்டும். தில் லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீர்த்த 736 விவசாயிகளுக்கு திக்ரி, சிங்கு எல்லையில் நினைவிடம் அமைக்க வேண்டும். விவசாய விளைநிலங்களை கார்ப்பரேட்டு களுக்கு வழங்கக்கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஐக்கிய முன்னணி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோ.அருச்சுணன் தலைமை வகித் தார். இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத்தலை வர் பி.டில்லிபாபு, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.என்.மல் லையன், சி.வஞ்சி, அன்பு, ஆ.ஜீவா னந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சின்ன சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஜே.பிரதாபன், அகில இந்திய விவசாயிகள் மகாசபா மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், புரட்சிகர மக்கள்  அதிகாரம் அமைப்பின் மாநிலச்  செயலாளர் முத்துக்குமார், விவசாயி கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், அயோத்தி யாபட்டிணம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் எ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் சந்திரமோ கன், அ.சங்கரய்யா, மாவட்ட ஒருங் கிணைப்புக்குழு உறுப்பினர்கள் என்.கே.செல்வராஜ், வி.அய்யந் துரை மற்றும் விவசாய சங்கங்க ளின் தலைவர்கள் ஆர்.நடராஜன், எ.அன்பழகன், ஜி.கணபதி உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் பி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. ஏஐடியுசி மாவட்ட பொதுச்செய லாளர் டி.தனசேகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செய லாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ஜெயராமன், துரைசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் துரைசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், உயர்மின் கோபுரம் எதிர்ப்புக் குழுவின் தலைவர் செல்லமுத்து உட்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் நன்றி கூறினார்.