districts

img

காலமானார்

சேலம், செப்.26- மார்க்சிஸ்ட் கட்சியின் நங் கவள்ளி ஒன்றியக்குழு உறுப் பினர் தோழர் எஸ்.பாண்டியன் வியாழனன்று காலமானார். சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் சேலம் ்மாவட்டத் தலைவராகவும்,மாநிலக்குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த தோழர் எஸ்.பாண்டியன் வியாழனன்று காலமானார்.பஞ்சாலைத் தொழிலாளர்களை அணி சேர்ப்பதிலும்,சாதாரண உழைப்பாளி மக்களை கட்சி யில் இணைப்பதற்கும் சுமார் 35 ஆண்டு காலம், மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். இவரின் மறைவு தகவலறிந்து, சிபிஎம் மாவட்டச்செயலா ளர் மேவை.சண்முகராஜா,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.உதயகுமார்,என்.குணசேகரன், ஒன்றியச்செயலா ளர் கே.ராஜாத்தி உட்பட பலர்,அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.