உதகை, பிப்.23- கூடலூர் தாலூக்காவிற்குட்ப்பட்ட உப்பட்டி சேலக் குன்னா பகுதியில் செந்நாய் கூட்டம் வீட்டு எருமைகளை தாக்கி கொன்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம டைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை, புலி, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் வனவிலங்குகளால் வன விலங்கு, மனித மோதால் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருகிறது. இந்நிலையில், உப்பட்டி சேலக்குன்னா பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஐந்து வயது மதிக்கத்தக்க எருமை கன்றினை செந்நாய் கூட்டம் தாக்கி கடித்து கொன்றுள்ளது. இது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது செந்நாய் கூட்டம் கடித்து தின்றது தெரியவந்த துள்ளது. பின்னர், உடற்கூறு ஆய்வு செய்து அதே இடத்தில் எருமைக்கன்றினை புதைத்தனர். யானை, புலி, சிறுத்தை என மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் தற்போது செந்நாய் களும் வளர்ப்பு கால்நடைகளை தாக்கி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயை கொன்ற சிறுத்தை
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொங்கர் பாளையம். இந்த பகுதியில் உள்ளது நைனப்பன் கரடு. இது புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ள கிராமமாகும். இப் பகுதியை சேர்ந்தவர்கள் விவசாய கூலிகளாவும், கால்நடை களை வளர்ப்பது மட்டுமே தொழிலாக கொண்டவர்கள். இவர்களின் வீடுகளின் பின்புறமாக சுமார் 10 அடி தூரத்தில் வனப்பகுதியில் யானைகள் வராமல் இருப்பதற்காக அகழி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுப்புரான் (64) என்பவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளுக்கு பாதுகாப்பாக 2 நாய்களை வளர்த்து வந்தார். வழக்கம்போல செவ்வா யன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார். ஆடுகளுக்கு பாதுகாப்பாக அவரது வளர்ப்பு நாய் அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்தார். நள்ளிரவில் நாயின் சத்தம் கேட்டு சுப்பு ரான் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது நாயை, சிறுத்தை கடித்து குதறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. சங்கிலியால் நாய் கட்டப்பட்டிருந்ததால் சிறுத்தையால் இழுத்துச்செல்ல முடியவில்லை. சுப்புரான் வந்து சத்தம்போட்டதும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன் இதே போன்று மற்றொரு நாயை சிறுத்தை கடித்து இழுத்து சென்ற போது அகழியை தாண்ட முடியாமல் நாயை பாதியில் விட்டுச் சென்றது. சிறுத்தை அடுத்தடுத்து நாய்களை கொன்று வருவது அப்பகுதியில் வசிப்பவர்களிடம் பெரும் அச்சத்தை ஏற் படுத்தி உள்ளது.