districts

img

பள்ளத்தில் சிக்கிய கனரக லாரி

நாமக்கல், ஆக.9- பள்ளிபாளையத்தில் சாலையோரமிருந்த பள்ளத்தில் சிக்கிய கனரக லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தனியார் காகித ஆலையிலிருந்து பேப்பர் கட்டுகளை ஏற்றிக்கொண்டு, தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த காம ராஜர் என்ற லாரி ஓட்டுநர், பெங்களூரு நோக்கி செல்வதற் காக பள்ளிபாளையம் வியாழனன்று இரவு வந்தார். அப்பொ ழுது ஆர்எஸ் சாலை பிரிவு என்ற பகுதி அருகே எதிர்பா ராத விதமாக சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டதால், மேற் கொண்டு வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரவு தொடங்கி வெள்ளியன்று காலை வரையிலும் வாக னத்தை மீட்கும் முயற்சியில் லாரி ஓட்டுநரும், உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டபோதிலும், லாரியை மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஜேசிபி இயந்தி ரத்தின் உதவியுடன் லாரியானது பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பிரதான சாலையில் கனரக லாரி பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால், நீண்ட தூரங்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.