திருப்பூர், அக். 24 - திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநக ராட்சி துவக்கப்பள்ளி சுவர்களில் அனை வரையும் ஈர்க்கக்கூடிய அழகிய படங் களை வரைந்து பட்டாம்பூச்சி குழுவி னர் அசத்தினர். பட்டாம்பூச்சி குழுவில் உள்ள அனைவரும் அரசு பள்ளிகளில் பணி யாற்றி வரும் ஆசிரியர்கள் ஆவர். அவர் கள் பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும், பருவ விடுமுறை நாட்களிலும் பள்ளிக ளுக்குச் சென்று ஓவியம் வரையும் பணி யில் ஈடுபடுகின்றனர். இவர்களது நோக் கம் அரசு பள்ளிகளில் மாணவர் அதிகம் விரும்பக்கூடிய படங்களை வரைந்து, மாணவர்களை உற்சாகப்படுத்துவ தும், மாணவர்களின் எண்ணிக்கையை அரசுப் பள்ளிகளில் அதிகப்படுத்துவ தும் ஆகும். அதன் அடிப்படையில் திருப்பூர் தெற்கு ஒன்றியம் பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் இந்தக்குழு மூலம் பல்வேறு வகையான ஓவியங்கள் சுவற்றில் வரை யப்பட்டன அவர்களுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.