சேலம், பிப்.23- வாழப்பாடி அருகே ஜல்லிக் கட்டு காளை இறந்து போனதால், அந்த காளையை தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்து நினைவிடமாக மாற்றியதோடு, ஆண்டுதோறும் நினைவுதினம் அனுசரித்து வருவது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப் பட்டி ஊராட்சி, சேசன்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவர் குமார் (52). விவசாயியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 38 முறை பங்கேற்று, எந்த மாடுபிடி வீரரிடமும் பிடிபடாமல், பல பரிசு களை வென்று இவரது குடும்பத் திற்கு புகழைத் தேடித்தந்தது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்.21 ஆம் தேதி, இந்த காளை உயிரிழந்தது, விவசாயி குமார் குடும்பத்தினரை மட்டுமின்றி, அக்கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. குடும்பத்தில் ஒரு அங்கத்தினரைப் போல கருதி பாச மாக வளர்த்த காளையை, தனது வீட்டிற்கு அருகிலேயே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொந்த நிலத்தி லேயே அடக்கம் செய்தனர். இதுமட்டுமின்றி இக்காளைக்கு ஆண்டுதோறும் நினைவு தினமும் அனுசரித்து வருகின்றனர். காளை நினைவிடத்தில், காளை யின் புகைப்படத்தை வைத்து பூக்கள் தூவி, மாலை அணிவித்து இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரித்தனர். இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவ கம் அமைத்து, ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் விவசாயி குமார் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.