சேலம், செப்.27- ஏற்காடு, மாரமங்கலம் 18 மலை கிராம மக்கள் கடந்த 35 ஆண்டு கால மாக பயன்பாட்டிலிருந்த மண்சா லையை தார்சாலையாக அமைக்க மறுத்து, மாற்றுப்பாதையை அமைக் கும், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு சேலம் மாவட் டக்குழு கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து, சிஐடியு சேலம் மாவட் டச் செயலாளர் எ.கோவிந்தன் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது, ஏற்காடு, மாரமங்கலம் மலை கிராம மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கையான பீல்டு எண்:6ல் தார்ச் சாலை அமைத்து சுமார் 18 கிராம மக்களின் வசதிகளையும், வாழ்வா தாரத்தையும், மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் லட்சுமி எஸ்டேட் முதலாளி யுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மீது ஏற்காடு மலை வாழ் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து விசாரனை மேற்கொண்டதில் 18 கிராமத்தினை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள், காலம் காலமாக பீல்டு எண்:6ல் அமைந்துள்ள குறுகலான சாலையைத்தான் மேனாங்குழிகாடு முதல் கொட்டச்சேடு கிராமம் வரை செல்ல தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். அதை விரிவுபடுத்தி மண்சாலையை தார் சாலையாக, மாற்ற அவர்கள் கடந்த பல ஆண்டு களாக போராடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் அவர்கள் பீல்டு எண்: 6 மற்றும் பீல்டு எண்:7 ஆகிய இரண்டை யும் பார்வையிட்டு, ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்ப டையிலும், அப்போது இருந்த ஆட்சி யர் தலைமையில் அமைக்கப்பட்ட அனுமதி குழு மேற்கண்ட விசாரணை மற்றும் ஆய்வு அறிக்கையின் அடிப் படையிலும் அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் ராமனால், பீல்டு எண்:6ல், அதாவது லட்சுமி எஸ்டேட்ஸ் நிலங் கள் வழியாக சாலை அமைப்பது தான் உகந்தது என்றும், அற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து தேவையான தொகையை பெற்று கொள்வது என் றும் தீர்மானித்து,
திட்ட மதிப்பீடு தயார் செய்து அதை மாவட்ட பழங் குடியினர் நல அதிகாரி மற்றும் மாநில பழங்குடியினர் செயலாளருக்கு சமர்ப் பித்துள்ளார். இந்நிலையில், அவர் மாற்றலாகி சென்றுவிட்டதால் பீல்டு எண்:6ல் சாலை அமைக்கும் திட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போதைய சேலம் மாவட்ட நிர் வாகத்தால் பீல்டு எண்:7ல் மிகவும் துரி தமாக பணி ஆரம்பிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இதனால் சில எஸ்டேட் முதலாளிக ளுக்கு தான் வசதியாக இருக்குமே தவிர பொது மக்களுக்கு எந்த பய னும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 4 கிலோா மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் எஸ்டேட் பணி செய்யம் தொழி லாளர்கள், மரவேலை செய்யும் தொழிலாளர்கள் மருத்துவம னைக்கு செல்லும் மக்கள் மற்றும் இதர அடிப்படை அத்தியாவசிய தேவை களுக்காக செல்லும் அனைத்து தரப் பட்ட மக்களும் சுமார் 1கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலைக்கு தள் ளப்பட்டள்ளனர். இதனால், அனைத்து தரப்பு மக்களும் மிகவும் கொந்தளித் துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக பீல்டு எண்:7ல் உள்ள சாலையில் சென்றால் வன விலங்குகள் முக்கியமாக காட் டெருமைகள் தாக்குதல் அடிக்கடி நிக ழும் ஆபத்து உருவாகியுள்ளது. எனவே மக்களின் ஏகோபித்த முடி வின் அடிப்படையில் ஏற்கனவே பயன் பாட்டில் உள்ள மண்சாலையை தார்ச் சாலையாக மாற்றி பழங்குடி மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.