districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் குறித்து நகர்மன்றத்தில் கேள்வி எழுப்பிய நகரமன்ற உறுப்பினர்

உடுமலை, செப்.9 - உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செப்டம்பர் 11 ஆம் தேதி  உடுமலை மத்திய பேருந்து நிலையத் தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம்  நியாயம் கேட்டு சங்கு ஊதும் போராட் டம் நடைபெறும் என்ற அறிவிப்பு  குறித்து நகர மன்ற கூட்டத்தில் 24ஆவது  வார்டு உறுப்பினர் ஜெயக்குமார்  கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் பேசிய உறுப்பினர் மார்க்சிஸ்ட் தோழர்கள் நகராட்சி நிர்வா கத்தை கண்டித்து போராட்டம் அறி வித்து உள்ளதை நிர்வாகத்தினர் அவர்க ளுடன் ஏன் பேச வில்லை என்றார். மேலும் அவர்களின் கோரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவரால் பல ஆண்டுகாலம் பொது மக்கள்  பயன்படுத்தி வந்த பாதையை ஏன்  அடைக்கப்பட்டு உள்ளது என்றும், நக ராட்சிக்கு சொந்தமான ஓடையில் ஆக்கி ரமிப்பு உள்ளதை அகற்ற வேண்டும், இல்லை என்றால் மழைகாலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற  கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்  என்றார்.  இதற்கு பதில் தந்த நகரமன்ற தலை வர் மத்தீன், மார்க்சிஸ்ட் கட்சி போராட் டம் குறித்து அவர்களிடம் பேசப்பட்டு  உள்ளது என்றும், புதிய பேருந்து நிலை யத்தில் இரண்டு வழிகள் மட்டுமே விட  வேண்டும் என்ற விதியின்படி சுற்றுச்  சுவர் கட்டப்பட்டு உள்ளது. புதிய  பேருந்து நிலையத்திற்கு போக்குவ ரத்து துறையின் அனுமதி கிடைத்தவு டன் பழைய பாதைகளை திறக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கழுத்தறுத்தான் பள்ளத்தில் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் இது தொடர் பாக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதாகவும், ஆக் கிரமிப்பு குறித்து வருவாய்த்துறை முறையான அளவீடு செய்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என் றார்.