ஆளே இல்லாத ஊரில் யாருக்குப்பா டீ ஆத்துர என நகைச்சுவை நடிகர் விவேக் வசனத்தைப்போல, பொதுமக்கள் மூஞ்சியைத்திருப்ப வெறும் சாலையில் வணக்கம்போட்டு சென்ற பாஜக வேட்பா ளர் ஏ.பி.முருகானந்தம் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபா ளையம் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்திருந்தார். முன்னதாக பாரியூ ரில் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக வேட் பாளர் நஞ்சை கோபி, பா.வெள்ளாளபா ளையம், குள்ளம்பாளையம், நாகதேவம் பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். முன்னதாக, வெள்ளாளபாளையத்தில் பிரச் சார வாகனத்தில் முருகானந்தம் ஏறினார். அப்போது, பொதுமக்கள் இல்லையென் பது மட்டுமல்ல, கட்சியின் தொண்டர்களோ, கூட்டணி கட்சிகளின் தொண்டர்களோ பத்து பேர் கூட இல்லாதது கண்டு வெறுப் படைந்தார். பின்னர் வேறு வழியின்றி வெறிச் சோடிய சாலையில் திறந்த வேனில் நின்ற படி கைகூப்பியபடியே சென்றார். பிரச்சா ரம் செய்ய சென்ற இடம் எல்லாம் எங்கும் கூட்டம் இல்லாத்தால் பிரச்சார வாக னத்தை நூறில் விரட்டியபடி சென்றனர். இதில், உச்சம் என்னவென்றால், நாக தேவம்பாளையத்தில் விவசாய ஏர் உழவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிடம் ஏர் உழவு செய்ய முயன்றார். அப்போது, உழவு எருதுகள் மிரண்டு ஓடியதை கண்டு சொந்த கட்சியினரே நகைத்தனர்.