90 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
உதகை, ஜூலை 25- நீலகிரியில் பொதுமக்கள் தவறவிட்ட, திருட்டுப்போன 90 செல்போன்களை உரியவர்களிடம் உதகை காவல் துறையி னர் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ௯டுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, ஆபாச படங்களை மற்ற வர்களுக்கு அனுப்புதல், மார்பிங் போன்ற குற்றங்களுக்கு எதி ராக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகி றது. இந்த காவல் நிலையங்களில், இதுவரை சுமார் ரூ.6 லட்சம் பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் பெற்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. ரூ.18 லட்சம் மதிப்புள்ள பொதுமக்களால் தவறவிடப் பட்ட மற்றும் திருடுபோன 90 செல்போன்கள் கண்டுபிடிக்கப் பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சைபர் கிரைம் சம் பந்தமாக சமூக வலைதளங்கள், பத்திரிக்கை, பள்ளி, கல்லூரி கள், மக்கள் கூடும் இடங்கள், மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. எனவே சைபர் கிரைம் சம்பந்தமாக பொதுமக் கள் பாதிக்கப்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம் என சைபர் குற்றப்பிரிவு போலிசார் தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி
கோவை, ஜூலை 25- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். அப்போது, கோவை மாநகராட்சி, 67 ஆவது வார்டை சேர்ந்த கணபதி அம்மாள் (80) என்பவர், ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்தபோது நுழைவு வாயில் முன்பு மயக்கம் வருகிறது என்று கூறி தரையில் அமர்ந்து கொண்டார். இதையடுத்து அருகிலிருந்த போலீசார் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத் தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை போலீசார் பரி சோதனை செய்ததில், மண்ணெண்ணை கேன் வைத்திருந்த தையடுத்து போலீசார் அந்த கேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கணபதி அம்மாள் கூறுகையில், எனது வீட்டிற்கு முன்பு சாக்கடை கழிவு நீரானது பல ஆண்டுகளாக தேங்கி உள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவிரக்தி அடைந்த நாடு, எனது பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித் தார். இதையடுத்து கணபதி அம்மாளை ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தியதுடன், அவரை மனு கொடுக்க அழைத்து சென்றனர். மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
20 அயிரம் கன அடியாக குறைந்த காவேரி நீர்வரத்து
தருமபுரி, ஜூலை 25- கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண் ணீர் வந்தது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. திங்களன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக் கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 16 ஆவது நாளாக தடை விதித்துள்ளது. போலீசார், தீயணைப்பு படையினர், வரு வாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
சட்டவிரோத வெடிவைப்பு - வீடுகள் விரிசல் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது
ஈரோடு, ஜூலை 25- சட்டவிரோத வெடிவைப்பால் வீடு கள் விரிசல் விழுந்த விவகாரத்தை அலட்சியப்படுத்தி ஊழலுக்கு துறை போன அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்கிற தொடர் அழுத் தத்திற்கு பிறகு தற்போது கோட்டாட்சி யர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இயற்கை வள பாது காப்பு கூட்டமைப்பின் ஒருங்கினைப் பாளர் ந.சண்முகம், சென்னிமலை பூப் பறிக்கும் மலை பாதுகாப்பு இயக்கத் தின் பாரதி, நல்லசிவம் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சென்னிமலை சாமத்தாள் நகரில் கடந்த டிசம்பர் 29, 2021 அன்று, சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளுவதற்காக வெடிவைப்பு செய்தனர். இதனால், அருகில் இருந்த பல வீடுகள் விரிசல் விட்டு பாதிக்கப்பட் டது. இதைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் செய்து போராடினர். ஆனால், சட்டவிரோதமாக வெடி வைத்து கிரா வல் மண் அள்ளிய கனிம கொள்ளையர் கள் மீது, ஊழலில் திளைத்து வந்த சென்னிமலை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் கனிம கொள்ளை யர்களின் கூட்டாளி போல் செயல்பட்டு வந்த அன்றைய பெருந்துறை வட்டாட்சி யர் சு.கார்த்தி ஆகியோர் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20 க்கும் மேற்ப்பட்ட மனுக்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் உள்ளிட்ட பலராலும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் கடந்த ஆறு மாதத்தில் மனுக்கள் கொடுக்கப்பட் டது. இதன் மீதும் எவ்வித நடவடிக்கை யும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 10-06-2022 அன்று ஈரோடு கோட்டாட்சியரிடம் நேரில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படை யில், சட்ட விரோத வெடிவைப்பு மற் றும் கனிமக் கொள்ளை மீது நடவ டிக்கை எடுக்கப்படாதது தொடர்பாக ஈரோடு கோட்டாட்சியர் (ஆர்டிஓ) 26-07-2022 செவ்வாயன்று விசாரணை நடத்த உள்ளார். ஈரோடு கோட்டாட்சியரின் விசார ணைக்கு புகார்தாரர் முகிலன், சட்ட விரோதமாக வெடி வைத்தவர்களுக்கு துணை நின்று தடயங்களை மறைத்த, பெருந்துறை முன்னாள் வட்டாட்சியர் சு.கார்த்தி (மே 2022 வரை பணி), சென் னிமலை கிராம நிர்வாக அலுவலர் (மோசடி நத்தம் பட்டா தயாரித்து சஸ் பெண்ட் செய்யப்பட்ட ) சிவக்குமார் உள் ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிக ளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஊழல் அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கும் வரை இடையறாது செயல்படுவோம். சட்டவிரோத வெடி வைப்பால், கனிமக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்க போராடுவோம் என தெரி வித்துள்ளனர்.
வீட்டுமனை பட்டா வழங்க இழுத்தடிப்பதா? ஆட்சியரகத்தில் நெசவாளர்கள் முற்றுகை
திருப்பூர், ஜூலை 25- நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்காமல் இழுத்தடிப் பதை கண்டித்து, உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் நெசவாளர் காலனியில் வசித்து வரும் நெசவா ளர்களுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட் டோர் துறை சார்பில், மடத்துக்குளம் தாலுக்கா தாந்தோணி கிராமத்தில் உள்ள நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்களிப்புத் தொகையுடன் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு பட்டா வழங் காமல் துறை அதிகாரிகள் கால தாமதம் செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் மேற்படி இடத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு முடிவுற்று மாவட்ட நிர்வா கம் கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் பட்டா வழங்கா மல் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்தனர். இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலை யில் மாவட்ட ஆட்சியரும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சியரின் அறிவிப்பையும் மீறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் காலதாமதம் செய்து வருவதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவல கத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர் களை சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்து அழைத்துச் சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீடு ஒதுக்கி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு
திருப்பூர், ஜூலை 25- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் முப்பதுக்கும் மேற்பட்டோர் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், மாவட்டத்தில் 250 மாற்றுத் திறனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பதாகவும், அவர்க ளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கண் பார்வை யற்ற மாற்றுத் திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பிரிவில் சேர்க்க வேண்டும், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், அரசு குடியிருப்பில் தங்க ளுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்தனர்.
சிக்கண்ணா கல்லூரியில் படித்த மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு
திருப்பூர், ஜூலை 25 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1995-98 ஆம் ஆண்டு பி.காம்., பயின்ற மாணவர்கள் 25 வருடங்க ளுக்கு பிறகு ஒன்றிணைந்து வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச் சியை நடத்தினர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரண்டு நாட் கள் இந்த சந்திப்பை நடத்தினர். இந்த நிகழ்வை அவ்வகுப்பில் படித்த மாணவர்கள் சுந்தரபாண்டியன், பன்னீர்செல்வம், சதீஸ்குமார், ஹரிஹரசுதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் படித்தபோது நடந்த மலரும் நினைவுகளை பரிமாறி கொண்டனர். அந்த வகுப்பில் படித்த மாணவர்களில் 10 பேர் திருப்பூரில் பட்டயக்கணக்காளர்களாக உள்ளனர். ஒருவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பலர் சொந்தமாக பனியன் ஏற்றுமதி நிறுவனம், பிரிண்டிங், எம்பிராய்டரி உட் பட தொழில் செய்து வருகின்றனர். இருவர் வங்கியிலும், ஒருவர் சிறைத்துறை அதிகாரியாகவும் பணியாற்றி வரு கின்றார். ஒவ்வொருவரும் பழைய கல்லூரி நினைவுகளை பரி மாறிக் கொண்டனர். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து நண்பர்களும் அடுத்து குடும்பம் சகிதமாக சந்திக்க லாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் தாங்கள் படித்த கல்லூரிக்கு வகுப்பு தோழர்கள் அனைவரும் சேர்ந்து ஆக்கப் பூர்வமான உதவிகளை செய்வது எனவும், பொருளாதாரத் தில் பின் தங்கிய கல்லூரி மாணவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.
கஞ்சா விற்றவர் கைது
அவிநாசி, ஜூலை 25- அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்த வெளி மாநில இளைஞர் கைது செய் யப்பட்டார். அவிநாசி அருகே அவிநா சிலிங்கம்பாளையம் சாலை யில் கஞ்சா விற்பனை செய் யப்படுவதாக காவல்து றைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில், சந்தேகத்திற்கு இடம ளிக்கும் வகையில் நின்றி ருந்த நபரை காவலர்கள் விசாரித்தனர். இவர் உத்திரப் பிரேதசத்தைச் சேர்ந்த சிக் கந்தர் சவுகான்(30) என்ப தும், இவரிடம் விற்பனைக் காக 10க்கும் மேற்பட்ட பொட் டலங்களில் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டது. இதையடுத்து அவிநாசி காவல்துறைனர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.
தாய்-மகள் தற்கொலை
தாராபுரம் ஜூலை 25- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ்நகர் வீதியை சேர்ந்தவர் பூங்கொடி (29). இவ ரது மகள் வர்ஷா (9). அங்குள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பூங்கொடியின் கணவர் காளிதாஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூங் கொடி அவரது தாயார் சரஸ்வதி வீட்டில் மகளுடன் வசித்து, சலவை தொழில் செய்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வாரம் பூங்கொடியின் கணவர் நினைவு வந்துள்ளது. அதிலிருந்து பூக்கொடி மிகுந்த மனவருத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று சரஸ்வதி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது பூங்கொடியும், வர்ஷாவும் ஒரே சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்த தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையறிந்த பொது மக்கள் உடனடியாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவலர்கள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஓடையில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் ஜூலை 25- திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே ஓடையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதா வது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட் சிக்கு உட்பட்ட 8ஆவது வார்டு பச்சாபாளை யத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்க ளது ஊரில் மழை பெய்தால் ஓடையில் வரும் நீர் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடையின் அருகில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற னர். மேலும் இரு பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், தனியார் மருத்துவமனை, மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் குடியி ருப்புகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலை யில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேக ரிக்கப்படும் கழிவுகளை ஏற்கனவே ஓடையில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு வதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல்லடம் நக ராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது ஓடையில் மின் மயானம் அமைக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இந்த ஓடையில் ஏற்கனவே நிலவிவ ரும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் படாதநிலையில் தற்போது மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
தாராபுரம், ஜூலை - 25 தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தாராபுரம் கிளை 3 ஆவது மாநாடு தாராபுரம் வர்த்தகக் கழக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. மீர்சிரா ஜூதீன் சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். கே. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். என்.செங்குட்டுவன் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜன் துவக்க உரையாற்றினார். எம்.நடராஜன் வேலை அறிக்கையும், என்.முத்துசாமி வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். அறிக் கையின் மீது விவாதம் நடைபெற்றது. மாநாட்டில் 80 மாத டிஏ உயர்வு மற்றும் நிலுவை தொகை உடனடியாக வழங்கவேண் டும். 2020 லிருந்து பணியில் இறந்து போனவர் களின் வாரிசுகளுக்கு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமுல் வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பென்சன் திட் டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. தலைவராக கே.வெள்ளைச்சாமி, செயலாளராக எம்.நடராஜன், பொருளாள ராக என்.முத்துச்சாமி, துணை தலைவராக ஜி. மீர் சிராஜூதீன், துணை செயலாளராக என். பெரியசாமி மற்றும் 20 பேர் கொண்ட நிர்வாக குழுவும் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வா கிகளை வாழ்த்தியும் எதிர்கால கடமைகள் குறித்தும் மாநில துணை தலைவர் ஆர்.சேது ராமன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கி.மேகவர்ணன், ஆ.மணியன், சீரங்கராயன், பாரதி ஆகியோர் பேசினர். முடிவில் என்.பெரி யசாமி நன்றி தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவ முகாம்
அவிநாசி, ஜூலை 25- அவிநாசி அருகே வஞ் சிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்த தானம், கண்சிகிச்சை, உடல் பரிசோதனை முகாம் உள் ளிட்ட சிறப்பு மருத்து முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. வஞ்சிபாளையம் நண்பர் கள் அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், சிகரங்கள் அறக்கட்டளை, தி ஐ பவுண் டேசன், துளசி பார்மஸி ஆகி யவை சார்பில் வஞ்சிபாளை யம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற இம்முகா மில், 46 பேர் ரத்த தானமும், 80 பேர் இரத்த அழுத்தம், 200 பேர் சர்க்கரை பரி சோதனை உள்ளிட்டவை மேற்கொண்டனர்.
மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
உதகை, ஜூலை 25- மின்வெட்டு பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உலாந்தி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திங்களன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயரா மன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இதில், உல்லத்தி ஊராட்சியை சேர்ந்த அழகர்மலை பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதா வது, அழகர் மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினந்தோறும் 3 முதல் 5 தடவை வரை மின் விநியோ கம் தடைப்படுகிறது. இவ்வாறு மின் வினியோகம் தடைபட் டால் 6 மணி நேரம் கழித்துதான் மின்சார ஊழியர்கள் வந்து சரி செய்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல் மின்வெட்டு பிரச்சனை இருந்தால் மறுநாள் வந்து தான் சரி செய்கின்றனர். இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரி வித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோன்று அணிக்கொரையை சேர்ந்த கிராமமக்கள் கொடுத்துள்ள மனுவில், நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று அணிக்கொரையை சேர்ந்த கிருஷ்ணகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 302-பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல் லாததால், இந்த வழக்கில் வாதாட அரசு தரப்பில் சிறப்பு வழக் கறிஞரை நியமிக்க வேண்டும். மேலும், காவல் கண்காணிப் பாளர் அலுவலக ஆய்வாளரையும் இந்த வழக்கு முடியும் வரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வணிகத்திற்கு குறைவான விலை நிர்ணயிப்பு என குற்றச்சாட்டு
ஈரோடு, ஜூலை 25- ஆன்லைன் வணிகத்திற்கு குறைவான விலை தொடர்ந் தால் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் எம்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். இதில், தலைவர் மோகன் சங்கர், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர் ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஆன்லைன் வணிகத்திற்கு குறைந்த விலையினை நிர்ணயம் செய்யும் தாயரிப்பாளர்கள், பாரம்பரிய நிறுவனத்திற்கு அதிக விலையை நிர்ணயம் செய்கிறார்கள். தயாரிப்பு நிறுவனங்களின் இத்த கைய பாரபட்சமான போக்கை கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் சில்லரை வணிகர்களோடு மேற்படி நிறுவனங் களின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் நடை பெறும். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)விதிப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து எளிமைப்படுத்த வேண்டும். வணிகர் நலவாரியத்தால் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகப்படுத்த வேண்டும். ஆன்லைன் வணி கத்தை முறைப்படுத்த வேண்டும். இதற்கென ஒன்றிய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
ஈரோடு, ஜுலை 25- ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் 2021-22-ஆம் நிதி ஆண்டில் 1972 மாற்றுத்திற னாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4856 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உத வித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 658 பேருக்கு மாதம் ரூ.2000 வீதம் ரூ.12.55 கோடி பராமரிப்பு உதவித்தொகை களும், 40 சதவிகிதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோ ருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4614 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000- வீதம் ரூ.8.93 கோடி பராமரிப்பு உதவித்தொகையும், 40 விழுக்காடு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பரா மரிப்பு உதவித்தொகையாக 144 பேருக்கு மாதம் ரூ.2000- வீதம் ரூ.28.87 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந் தோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக 317 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதம் ரூ.2000- வீதம் ரூ.5.77 லட்சம், முதுகு தண்டுவடம், நாள் பட்டநரம்பியல் நோய் மற்றும் பர்கின் சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.7,02,000 வழங் கப்பட்டுள்ளன.