பி.ஆர்.நடராஜன் எம்பி.,-யின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ9லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் சமையல் கூடம் கட்டு வதற்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்நி கழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன், சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஈ.பாலசுப்பிரமணியம், சிபிஎம் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர்.