districts

கட்டுமான பணிக்கு நகராட்சி நிர்வாகம் சீல்

உதகை,பிப்.8 - கேரள மாநிலத்தை சேர்ந்த பிரிட் ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நக ரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு  கட்டி வருகிறார். தற்போது அங்கு  தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது.  இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப் பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை  வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை  அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந் தது. ஆனால், இதனை யாரும் பொருட் படுத்தவிலை. பின்பு புதனன்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணி யாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர். அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்து டன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை  பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து  ஓடினர். இருந்த போதிலும் 12 தொழிலா ளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தக வல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட் கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேல் காந்தி நகரை சேர்ந்த சகீலா(30), பாக்கி யலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார்கள். வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ்(25), ஜெயந்தி(55), சாந்தி(45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இறந்தவர்கள் உடல்களை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந் தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்க ளின் உறவினர்கள் திரண்டனர். மேலும்  இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களி டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தி னார். ஆனால் பொதுமக்கள் போலீஸ்  காவல் கண்காணிப்பாளரின் காரை  மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் காவல் துறைக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உதகை லவ்டேல் போலீசார் கட்டிட உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக் கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற் பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் 4 பேரையும் வரு கிற 21-ஆம் தேதியன்று வரை நீதி மன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி  உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் யும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை அடுத்து உதகை அரசு மருத்து வமனையில் வைக்கப்பட்டிருந்த இறந் தவர்களின் உடல் பிரேத பரிசோத னைக்கு பிறகு அவர்களது உறவினர்க ளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட் டம் நீடித்தது. இதையடுத்து நள்ளிர வில் உதகை தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்த வர்களின் உறவினர்களுடன் பேச்சு  வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. வியாழனன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. பின்பு இங்கு கட்டப் பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வா கம் அனுமதி அளித்த அளவை மீறி  கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடி யில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.  இதனிடையே, இவ்விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.அருணா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு இழப்பீடுத்தொகையை அமைச்சர் வழங்கினார்.