கோவையில் வானவில் கூட்டமைப்பு சார்பில், 5 ஆம் ஆண்டு வானவில் சுயமரியாதை பேரணி பந்தையசாலை பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. பாலின வேறுபாடுகளை விடுத்து, தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். ‘எங்கள் பாலினம், எங்கள் உரிமை’, ‘எனது உடல், எனது உரிமை’ போன்ற முழக்கங்களை எழுப்பியவாறும், பதாகைகள் மற்றும் வானவில் கொடிகளை ஏந்தியவாறும் பேரணி நடைபெற்றது.