தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம் பட்டி ஊராட்சிக்குபட்ட இட்லப்பட்டி கிராமத் தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த போயர் இனமக்கள் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை. கல்லுடைத்தல், கிணறு வெட்டுவது, வயல்களுக்கு வரப்பு கட்டும் பணி செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இக்கிராமத் தில் பொது கிணறு, தெரு விளக்கு, குடிநீர் வசதி, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை ஆகியவை வருவாய்த்துறை மூலமும், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக் கப்பட்டுள்ளது. 1937 ஆம் ஆண்டில் மொட்டை போயன் என்பவரது பெயரில் சர்வே எண்:15/1ல் 97 சென்ட் நிலம் இருந்தது. இந்த இடத்தில் இவரது உறவினர்களுக்கு 25 பேருக்கு வீடு கட்ட இடமளித்து இடலப்பட்டி என்ற கிரா மத்தை உருவாக்கினார். இதனிடையே இக் கிராமத்தின் அருகே உள்ள சாதி ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், அரசுக்கு சொந்தமான இடத்தை 1962 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதாக போலிபத்தி ரம் செய்துள்ளார். இந்நிலையில், இக்கிரா மத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடத் தில், இலவச மனைப்பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பம் செய்தனர். ஆனால், வரு வாய்த்துறையினர் பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை இந்த இடம் எனக்கு சொந்தமானது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இட்லப்பட்டியை சேர்ந்த மக்கள் மேற்கண்ட இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இக்கிராமத் தைச் சேர்ந்த 21 பேருக்கு சர்வே எண்:2/1ல் இல வச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு 9 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதேசமயம் பட்டா வழங்கியும், அதற்கான இடத்தை அளந்து கொடுக்கப்படவில்லை. மாறாக சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு ஆதரவாக, இம்மக்களை வருவாய்த்துறை அலைகழித்து வந்தனர். நூறாண்டு காலமாக வீடுகட்டி குடியிருந்து வரும் இட்லப்பட்டி கிராம மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். வருவாய்த்துறை வழங்கிய 9 பேருக்கான இலவச மனைப் பட்டாவுக்கான இடத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்க வேண்டும். இக்கிராமத் திற்கு சுடுகாடு வசதி, ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அரூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
இக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வருவாய்த்துறையும், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஆதர வாக வருவாய்த்துறையும், காவல்துறையும் துணை நின்றது. இதனையடுத்து இட்லப்பட்டி கிராம மக்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜன.30 ஆம் தேதியன்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். 5 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின் முடிவில், அரசு அதிகாரி கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடமிருந்து மீட்டு பயனாளிகளுக்கு வழங்குவது, சுடு காட்டுக்கு இடம் வழங்குவது, ஒகேனக்கல் குடி நீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டனர். இதுகுறித்து இடலப்பட்டி ஊர் தலைவர் தங்கராஜ் கூறுகையில், எங்களுக்கு சொந்த மான இடத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், “கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் குடியிருக்கும் இடம் என்னுடையது. நீங்கள் ஊரை காலி செய்ய வேண்டும்” என மிரட்டி வந்தார். இத னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்தது. விவசாயத் தொழிலா ளர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளை வாக எங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. நாங் கள் வாழ்வதற்கு நம்பிக்கை ஏற்படுத்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். இதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த சாமூண்டீஸ்வரி என்பவர் கூறுகையில், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது கனவர் இறந்து விட்டார். கூலி வேலை செய்து பிழைத்து வரும் நான், வீடு இல்லாமல் உள்ளேன். எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்தனர். மனைபட்டாவுக்கான இடத்தை கேட்டு போராட் டம் நடத்திய பிறகு, வருவாய்த்துறை இடத்தை மீட்டு கொடுத்துள்ளனர்.அந்த இடத்தில் வீடு கட்டி அரசு வீடு ஒதுக்கி தரவேண்டும், என் றார்.
-லெனின், தருமபுரி