திருப்பூர், மே 7 - திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஏழு மையங்களில் 4000 மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். தேர்வு மையதிற்குள் பலத்த சோதனைக்கு பின் தேர்வா ளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்காக ஒன்றிய அரசு ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்து கின்றது. இதில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் இந்த வருட 2023-24ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு ஞாயிறன்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுத 4000 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் தேர்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தடை யில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையத்துக்கு வரக்கூடிய மாணவர் களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு, புகைப் படம் ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் பேனா, பென்சில், ரப்பர் போன் றவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் மாணவிகள் செயின், தோடு, தலைமுடி கிளிப், கொலுசு, ஷால் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதேபோல் அரை கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வரும் மாணவர்கள் மட்டுமே பலத்த சோதனைக்கு பின்பு தேர்வு மையத்துக்கு அனுமதிக் கப்பட்டனர்.