districts

img

கோவை: தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியினை சுற்றி பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்  கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6  பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்பு பணி மேற்கொண்டதுடன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் நான்கு தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். இடுப்பாடுகளில் இருந்து நான்கு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.உயிரிழத்த தொழிலாளர்கள்

கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் ஆகியோர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்  பிபில்போயால் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

;