அவிநாசி, ஜூன் 3- அவிநாசி அருகே கருமாபாளையத்தில் பலத்த காற்றி னால் 3750 வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழையுடன் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில், கருமாபாளையம் ஊராட்சிகளில் 3750 வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதைத்தொடர்ந்து அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிக ளில் தோட்டக்கலை, வருவாய்த்துறையினர் கணக்கெடுக் கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சின்னேரிபாளையம் பகுதி யில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பலத்த காற்றால் சாலையோரம் உள்ள மரக்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. இதனால் இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை மின்தடை ஏற்பட்டது.