districts

img

இடுவாய் ஊராட்சியில் ஏழாண்டு போராட்டத்திற்கு பின் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

திருப்பூர், மே 4 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி யில் 42 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா  வழங்கியும், இடம் தரப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையி லான ஊராட்சி நிர்வாகத்தின் தொடர் முயற்சி  காரணமாக ஏழாண்டுகளுக்குப் பிறகு 30  குடும்பங்களுக்கு தற்போது பட்டா வழங்கப் பட்டுள்ளது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி யில் உள்ள பாரதிபுரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஏற்கனவே 2002  ஆம் ஆண்டு அரசினால் ரத்து செய்யப்பட்ட பட்டா இடங்களில் இந்த 42 பேருக்கும் பட்டா  வழங்கப்பட்டது. இந்த 42 பேரும் தங்களுக்கு  பட்டா வழங்கப்பட்ட இடங்களுக்குச் சென்ற பொழுது அங்கு ஏற்கனவே பட்டா பெற்றோர்  குடியிருப்பது தெரியவந்தது. குடியிருப்பவர் களை அப்புறப்படுத்தி புதிதாக 42 பேருக்கு  பட்டா கொடுத்ததால் அந்த இடத்தை அவர்க ளுக்கு ஒப்படைக்க முடியவில்லை. இப்பிரச்சினை வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையிட்டு குடி யிருப்பவர்களை காலி செய்யக் கூடாது என வும், 43 பேருக்கு மாற்று இடங்களில் பட்டா  இடம் ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை  வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டது. பட்டா பெற்ற 42 பேரும் 2018ஆம் ஆண்டு  நீதிமன்றத்தை அணுகியபோது, இவர்க ளுக்கு இடத்தை அளந்துதரச் சொல்லி நீதி மன்றம் வழிகாட்டியது. எனினும் கடந்த பல  வருடங்களாக அவர்களுக்கு இடத்தை அரசு  வழங்காமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பொறுப்பேற்ற போது இவர்களுக்கு பட்டா இடத்தை அளந்து  தர அரசிடம் வலியுறுத்தி ஏற்பாடு செய்வோம்  என வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுமார் 80  சென்டிற்கும் அதிகமான இடத்தை வள்ளுவர்  நகர் பகுதியில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அந்த இடத்தை மீட்டுத் தரக்கோரி கோட்டாட்சியரிடம் ஊராட்சித் தலைவர் மனு தந்து தொடர்ந்து வலியுறுத் தியதன் அடிப்படையில் அந்த இடம் 2022ஆம்  ஆண்டு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தில் இந்த 42 பேருக்கும் இடத்தை அளந்து கொடுப்பதில் ஊராட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என கடிதம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியும் தரப்பட்டது. 2022இல் அந்த இடத்தை அளந்து 42  பேருக்கும் பட்டா வழங்கும் சூழல் ஏற்பட்ட போது அரசியல் காரணங்களால் பல்வேறு தடைகள் ஏற்பட்டு பட்டா கொடுப்பது நிறுத்தப் பட்டது. பின்பு ஊராட்சி மூலம் தொடர் முயற்சி  எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந் தித்து அவர்களுக்கு பட்டா வழங்க வலியு றுத்தப்பட்டது.

42 பயனாளிகளையும் மீண் டும் ஆய்வுசெய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  அதன் பயனாக வியாழனன்று மாலை 4  மணிக்கு திருப்பூர் சார்ஆட்சியர் அலுவல கத்தில் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் முன்னிலையில், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் 30 பய னாளிகளுக்குப் பட்டா வழங்கினார்.  இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு வட்டாட்சி யர் (தனி) தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர்  கலந்து கொண்டனர். ஏழு ஆண்டுகள் நீடித்து வந்த பட்டா பிரச்சனைக்கு வியாழனன்று முடிவு காணப்பட்டது குறித்து சார் ஆட்சியர்,  வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம  நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கு தொடர் முயற்சி எடுத்து, ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஆட்சேபனை இல்லை  என கடிதம் வழங்கி, இந்த பயனாளிகளுக்கு  உரிய இடத்தை மீட்டுக் கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசனுக்கும், துணைத்தலைவர் மற்றும்  இடுவாய் ஊராட் சிமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக் கும் மக்கள் நன்றி தெரிவித்தனர். பட்டா பெற்ற  பெண்கள் ஆனந்தக் கண்ணீருடன் அனைவ ருக்கும் நன்றி கூறியது நெகிழ்ச்சி ஏற்படுத்தி யது.