districts

img

திருச்செங்கோட்டில் 3 நாள் விவசாய கண்காட்சி

நாமக்கல், செப்.20- திருச்செங்கோட்டில், முதன்முறை யாக விவசாய கண்காட்சி நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில், ராசி அக்ரிமார்ட் நிறுவனத்தி னர், பொன்னி சுகர் ஈரோடு, ராசிபுரம் ஸ்ரீ அம்மன் ட்ரேடர்ஸ் ஆகியோருடன் இணைந்து மூன்று நாள் விவசாய கண் காட்சி வெள்ளியன்று துவங்கியது. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், திமுக தலைமை செயற் குழு உறுப்பினர் நடேசன், திருச்செங் கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தனர். இந்த கண்காட்சி அரங்குகளில், அனைத்து விதமான விவசாய இயந்தி ரங்கள் மற்றும் புதிய அறிமுக கரு விகளுக்கான அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், நீர் சிக்கனம், சிக்கன உரப் பயன்பாடு, குறைந்த வேலையாட் கள் விரைவாக பயிர் முதிர்ச்சி, ஆற்றல் மற்றும் மின்சார சேமிப்பு ஆகியவைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகள் சிறு குறு விவசாயிகளுக்கு வழங் கும் மானியங்கள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.  இதுகுறித்து கண்காட்சி ஒருங்கி ணைப்பாளர் நல்லியப்பன்  கூறுகை யில், இந்த கண்காட்சிக்கு பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனை பார்த்து பயன்பெறுவார்கள். திருச்செங் கோட்டில் இதுபோல் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுகிறது, என்றார்.  திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்செங் கோடு ஒன்றியத் தலைவர் சுஜாதா தங்க வேல், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந் தில், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட னர்.  விவசாயிகள் பலரும் ஆர்வத்து டன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயன் பெற்ற னர்.