districts

img

திருப்பூருக்கு 250 டன் யூரியா உரம் வந்தது

திருப்பூர், செப்.22-  தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளது.  திருப்பூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) சின் னசாமி இது குறித்து தெரிவித்ததாவது:  திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையை நம்பியும், பாசன பகுதிகளில் திறந்து  விடப்படும் தண்ணீரைக் கொண்டும், கிணறு, ஆழ்துளை குழாய் மூலமாக வும் நெல் 11 ஆயிரம் ஹெக்டேரிலும்,  தானியங்கள் 57 ஆயிரம் ஹெக்டே ரிலும், பயிறு வகைகள் 20 ஆயிரம் ஹெக் டேரிலும் மற்றும் நிலக்கடலை 10 ஆயி ரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்ப டுகிறது. இவை தவிர தென்னை நிலைப்  பயிராக உள்ளது.  நடப்பு பருவத்தில் செப்டம்பர் மாதத்துக்கு தேவையான யூரியா உரம் கிரிப்கோ நிறுவனத்தால் 250 மெட்ரிக் டன் ரயில் மூலம் திருப்பூர்  மாவட்டத்துக்கு பெறப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகி றது.

தற்போது வரப்பெற்றுள்ள உரங்க ளுடன், திருப்பூர் மாவட்டத்தில் யூரியா  உரம் 1872 மெட்ரிக் டன்னும், டிஏபி உரம்  1201 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரம்  932 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம்  4633 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட்  உரம் 602 மெட்ரிக் டன்னும் போதிய அள வில் இருப்பு உள்ளது.  அரசு சார்பில் அவிநாசி வட்டா ரத்தில் உயிர் உர உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, அனைத்து பயிர்க ளுக்கு தேவையான உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டம் முழு வதும் வேளாண்மை விரிவாக்க மையங் கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்படுகிறது. விவசாயிகள் உரம்  வாங்கும்போது, அவர்கள் விரும்பும் உரங்களை விற்பனை செய்ய வேண் டும். எந்த உரங்களையும் வற்புறுத்தி கூடுதலாக உர விற்பனையாளர்கள் விற் பனை செய்யக்கூடாது. சில்லரை உர  விற்பனையாளர்கள், அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரிய விலைக்கு  விற்பனை செய்ய வேண்டும். உர விற்ப னையாளர்கள் கடை அறிவிப்பு பலகை யில் உர இருப்பு விவரங்களை விவசாயி களின் பார்வைக்கு தெரியும் படியும்,  நிறுவனம் வாயிலாக உரங்களின் விலைப் பட்டியலையும் தெரியப்படுத்த  வேண்டும்.  உரக்கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் உரக்கட்டுப் பாட்டு ஆணை 1985-ன் விதிகளின்படி, உர விற்பனையாளர்கள் மீதுகடும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு, விற்பனை உரி மம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித் தார்.