நெசவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு - அமைச்சர் காந்தி பேட்டி
ஈரோடு, ஜூலை 26- நெசவு தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருந்த தால் கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி செய்தியாளர் களிடம் தெரிவித்தார். ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் நடந்த ஜவுளி மொத்த கண் காட்சியினை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகளிடம் தேவைகள் குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்தோம். பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்கான ஒப்பந்ததை கடந்த 19ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் சம்பந்தப் பட்ட மில்களில் ஆய்வு செய்து வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் அனைத்து மில்களுக்கும் விலை யில்லா வேட்டி, சேலைக்கு நூல் வழங்கி, உற்பத்தி தொடங் கப்படும். டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உற்பத்தி செய் யப்பட்ட வேட்டி, சேலைகள் வருவாய்த் துறையிடம் ஒப்ப டைக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக விலையில்லா வேட்டி, சேலை பொதுமக்களுக்கு வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட விலை யில்லா வேட்டி, சேலையை பொதுமக்கள் யாரும் பயன் படுத்தவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு வழங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை சிறப்பாக இருந்ததால் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங் களை, விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது. வட மாநிலத்தவர்கள் அதுபோல உற்பத்தி செய்வதாக வந்த புகாரை தொடா்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதி காரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திமுக ஆட்சி வந்தால் தான் கைத்தறிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங் கள் ரூ.148 கோடி கடன் நிலுவை வைத்திருந்தனர். தற் போது ஒரு நயா பைசா கூட கடன் நிலுவை இல்லை. அனைத்து நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டு விட்டது. கைத்தறிக்கு 100 யூனிட் இலவச மின்சாரமாக இருந்ததை 300 யூனிட் ஆகவும், விசைத்தறிக்கு 500 யூனிட் இலவச மின்சாரமாக இருந்ததை 1,000 யூனிட் மின்சாரமாகவும் வழங்கப்பட் டுள்ளது. அந்த அளவிற்கு கைத்தறி, விசைத்தறிக்கு சலுகை கள் வழங்கியுள்ளோம். மேலும், நெசவு தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருந்ததால் அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட் டுள்ளது என்றார்.
குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என தாக்குதல்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
ஈரோடு, ஜூலை 26- குலத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என குறவர் இனத்தினர் முது தாக்குதல் நடத்திய நபர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படாத நிலையில், மாவட்ட வருவாய் அலுவ லரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சென்னசமுத்திரம் அருகே இராம நாதபுரத்தில் தனது கணவருடன் வசித்து வருபவர் மீனா. குறவன் சாதியைச் சேர்ந்த இவர்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் நிலத்திற்கு அருகிலுள்ள குப்புசாமி என்பவர், குறவன் சாதியைச் சேர்ந்த நீ ஆடு, மாடு வைத்து விவசாயம் செய்யத் தகுதியில்லை என தகாத வார்த்தைகளால் மிரட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்ததையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும், தற்போது வரையில் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில், தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் குப்புசாமியை கைது செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார்.
ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை
தருமபுரி, ஜூலை 26- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித் துள்ளது. கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணை களான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வெளி யேற்றப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் உபரிநீராக வெளி யேற்றப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 7,000 கன அடியாக வந்து கொண் டிருந்த நீர்வரத்து 1 மணி நிலவரப்படி, விநா டிக்கு 9 ஆயிரம் கன அடியாக அதிகரித் தது. இதனால், பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிக்கு செல்ல வேண்டாம், கரையோரப் பகுதியில் நின்று சுய படம் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோகப் பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்று லாப் பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு
தருமபுரி, ஜூலை 26- நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டு வதாகவும், மக்களின் அடிப்படை வசதி களை நிறைவேற்ற நிதி ஒதுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியாம்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் வி. உதயகுமார் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சி லர்கள் பூமாண்ட அள்ளி சங்கர், திண்டல் ஊராட்சி முருகன் ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுக கட்சியை சேர்ந்த சாந்தி பெரியண்ணன் உள்ளார். காரி மங்கலம் ஒன்றியத்தில் திமுக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 என மொத்தம் 7 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஒன்றிய கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெறுகின்றனர். மேலும் முறைகேடுகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் மேலாளர் குமரேசன் ஆகியோர் துணைபோகின்றனர். பணிகளை முறையாக டெண்டர் விடாமல், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுகின்றன. மேலும்,ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று 3 ஆண்டுகளை கடந்தும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், தனக்கு தேவையான கவுன்சிலர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதை கைவிட்டு அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் உரிய நிதி ஒதுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை திட்டம்: 90 சதவிகிதம் வீடுகளுக்கு விண்ணப்பம் தர கட்டாயப்படுத்துவதா? சிஐடியு எதிர்ப்பு
திருப்பூர், ஜூலை 26 - அனைத்து நியாயவிலைக் கடை விற்ப னையாளர்களும் அவர்கள் பகுதிகளில் மக ளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் படிவத்தை வீடு, வீடாக கொடுத்து வரும் நிலையில், 90 சத விகிதம் வீடுகளில் கட்டாயம் கொடுக்க வேண் டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பா.கௌதமன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதி வாளர் ஆகியோருக்கு செவ்வாயன்று விடுத் துள்ள கோரிக்கை வருமாறு: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப படிவம், கடந்த நான்கு நாட்களாக திருப்பூர் மாநகராட்சி 1 மற் றும் 2ஆவது மண்டலம் மற்றும் கிராம ஊராட் சிகளை சேர்ந்த பகுதிகளில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவம் வழங்கி வந்துள் ளனர். ஆனால் அதில் நகரப் பகுதிகளில் 60% தான் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி அதிகாரிகள் 90 சதவீதம் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களைக் கட்டாயப்ப டுத்துகின்றனர். விண்ணப்ப படிவம் வாங்க விருப்பமில்லை என 30 சதவீதத்திற்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தகுதி உள்ளவர்கள், தகுதியற்றவர் கள் என அனைத்து நியாயவிலைக் கடைக ளிலும் பிளக்ஸ் மற்றும் சுவரொட்டிகள் மூல மாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இதனால் தங்க ளுக்கு தகுதி இல்லை எனக் கூறி விண்ணப் பத்தை வாங்க மறுக்கின்றனர். அப்படி இருக் கும் நிலையில் விற்பனையாளர்களை 90 சத வீதம் விண்ணப்ப படிவங்கள் வழங்க வேண் டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா? மேலும் நியாய விலைக் கடைகளில் ஜூலை மாதத்திற்கு உண்டான துவரம் பருப்பு, பாமாயில் 20ஆம் தேதிக்கு மேல் அனுப்பப்பட்டு இன்னும் விநியோகம் செய்யப்படாமல் கடைகளில் இருப்பில் உள் ளது. இன்னும் இந்தப் பணிகளையும் விற்ப னையாளர்கள் செய்ய வேண்டி உள்ளது. ஆகவே மிகுந்த மன உளைச்சலுக்கு இடை யில் அனைத்து விற்பனையாளர்களும் பணி யாற்றி வருகிறார்கள். அவர்களை 90% படி வங்களை வழங்கித் தான் தீர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுவது நியாயம் தானா? குடும்ப அட்டைதாரர் வாங்க மறுக்கும் பொழுது எப்படி வழங்க முடியும். எனவே அனைத்து படிவங்களும் வழங்கி முடிக்க வேண்டும் என கண்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ப.கௌதமன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பல்லகவுண்டம்பாளையத்தில் விபத்து இரண்டு சிறுமிகள் பரிதாப சாவு
திருப்பூர், ஜூலை 26 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ் சாலை அருகே நேரிட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல் லப்பட்ட இரண்டு சிறுமிகள் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கனிஷ்கா (11), சஸ்விகா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். விஜயமங்க லத்தில் உள்ள தனியார் பள்ளியில் கனிஷ்கா ஐந்தாம் வகுப்பு, சஸ்விகா இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். புதனன்று காலை இந்த குழந்தைகளின் தாய் மாமா தங்கராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென் றார். பல்லகவுண்டம்பாளையம் சக்தி காம் போனன்ட்ஸ் முன்பாக தேசிய நெடுஞ்சாலை யில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி யில் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் தங்கராஜ் சென்று கொண்டிருந் தபோது அந்த சாலையில் இருசக்கர வாகனத் துக்குப் பின்னால் வந்த லாரி மோதியது. சிறு மிகள் உள்பட மூவரும் படுகாயம் அடைந் தனர். இதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி ரிழந்தார். தங்கராஜ் பலத்த காயத்துடன் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. திருப்பூரில் இருந்து லாரியை இயக்கிச் சென்ற ஓட்டுநர் செல்வராஜ் (45) என் பவரை காவல் துறையினர் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம்
நாமக்கல், ஜூலை 26- தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில், விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்ய முடியாத தால் நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் உழவர் சந்தைக்கு திண் டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோக னூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்த மங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடை யாக கொண்டு வந்து விற்பனை செய் கின்றனர். உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்கா யம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக் காய் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படு கிறது. கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர். இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90க்கு விற்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள் ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற் றத்துடன் திரும்பி செல்கின்றன. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதி காரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால், விவ சாயிகளிடம் நேரடியாக வாங்கி உழ வர் சந்தையில் விற்கப்பட்டது. தற் போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப் பட்டுள்ளது. உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
ஈரோடு, ஜூலை 26- ஈரோட்டில் நடைபெற்ற மாற் றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 910 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, உதவித்தொகை, பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனம், பட்டா, குடிநீர் வசதி, அடையாள அட்டை, அடுக்குமாடி குடியிருப்பு வீடு, வங்கி கடனுதவி உள்ளிட்ட 127 கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அளித்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், 17 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 910 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர் முகாமை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இம்முகாமில், 22 நபர்களுக்கு, 9.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டுப்பாளையம், ஜூலை 26- தொடர் மழை காரணமாக பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப் பட்டது. தற்போது நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வா யன்று காலை 11 மணிக்கு அணைக்கு விநா டிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 96 அடியாக உயர்ந்தது. நீலகிரியில் மழை அளவு குறைந்ததால், மதியத்திற்கு மேல் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந் தது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந் தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டத்தை ஒரே சீராக வைத்திருக்க, அணையிலிருந்து விநா டிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் போது, அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகு களில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் பவானியாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை காணப் படுகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில், மேட் டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீல கிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. அணையில் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்குவதால், அணையிலி ருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள் ளது. எனவே தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறு முகை, பெத்திக்குட்டை மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, தாழ்வான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பவானியாற்றின் கரை யோரப் பகுதியில் வருவாய் துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போதை மாத்திரை விற்பனை: 2 பேர் கைது
கோவை, ஜூலை 26- ஆர்.எஸ்.புரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை யில் ஈடுபட்டிருந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் போதை மாத்திரை விற் பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனை யின்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் போதை மாத்திரை விற்பனை யில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது, இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமி ருந்து 18 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.