districts

img

சாராயம் தயாரிக்க கடத்தப்பட்ட 2.7 டன் வெல்லம் பறிமுதல்

சேலம், டிச.19- சேலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு சாராயம் காய்ச்சுவதற்காக மினி லாரியில் கடத்தப்பட்ட 2.7 டன் வெல்லத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியில் சாராயம் காய்ச்சுவதற்காக மினிலாரியில் வெல்லம் கடத்திச் செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதன்பேரில் அன்னதானப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவஞானம் தலைமை யிலான காவல் துறையினர் சந்தைபேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, செவ்வாய்ப்பேட்டையில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில், எம்.சாண்ட் மணலுக்கு அடியில் 90 மூட்டைகளில் 2.7 டன்  வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து உடனடியாக மினி லாரியில் இருந்த மூல பிள் ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ஆதி ராமன், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்த  காவல் துறையினர் மினிலாரியை பறிமுதல் செய்த னர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து விழுப்புரத் திற்கு வெல்லத்தை கொண்டுச் சென்று, காட்டுப்பகுதி யில் வைத்து சாராயம் காய்ச்ச திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதன்பின், பறிமுதல் செய்யப்பட்ட வெல்லம் மற்றும் லாரியை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.