திருப்பூர், ஏப்.12- திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2022 திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. திருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வரவேற்புக்குழுத் தலைவர் வழக்கறிஞர் பி.மோகன் கூறியதாவது: திருப்பூர் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பண்பாட் டுத் திருவிழாவாக நடைபெறும் திருப்பூர் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 11 நாட்கள் கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளா கத்தில் நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் புத்தக திருவிழா நடத்த முடியாமல் போனது. இம் முறை புத்தகத் திருவிழா மக்க ளிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தப் பட்ட மாணவர் கலை, இலக்கிய திறனாய்வுப் போட்டிகளில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டது இந்த எதிர்பார்ப்பை உறுதிப்ப டுத்துவதாக உள்ளது.
95 அரங்குகள்
புத்தகக் கண்காட்சியில் மொத் தம் 95 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த கண்காட்சியில் சாகித்ய அகாடமி, பாரதி, உயிர்மை, விகடன், கிழக்கு, எதிர், என்சிபிஎச், தமிழினி, நற் றிணை, வம்சி, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட 36 புத்த கப் பதிப்பகங்கள் மற்றும் விற் பனை நிலையங்கள் என 94 நிறு வனங்கள் பங்கேற்கின்றன. கதை, கவிதை, நாவல், நாடகம், அறிவி யல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட் சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப் படுகின்றன. புத்தகங்கள் வாங் கும் அனைவருக்கும் 10 சதவிகி தம் தள்ளுபடி வழங்கப்படும்.
தொடக்க விழா
ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் இந்த புத்தகத் திரு விழாவை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார். மாவட்ட ஆட் சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் தொடக்க நிகழ்வில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முதல் புத்தக விற்பனையைத் தொடக்கி வைக்கிறார். திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம்.பால சுப்பிரமணியம் ஆகியோர் புத்த கத்தைப் பெற்றுக் கொள்கின்ற றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர். தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த கண்காட்சி யில் அனைவருக்கும் அனுமதி இலவசம். விடுமுறை நாட்களில் பகல் 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். ஒவ் வொரு நாளும் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவி களில் குலுக்கல் அடிப்படையில் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.500 மதிப் புள்ள புத்தகங்கள் என்ற அடிப் படையில் நாளொன்றுக்கு ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவச மாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது வரவேற்புக் குழு செய லாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர்கள் எம்பரர் வீ.பொன்னுசாமி, பிரஸ் கே.குமார சாமி, ச.நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.