சேலம், செப்.3- வேலூர் மத்திய சிறையிலிருந்து 18 தண்டனைக் கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு திங்களன்று மாற்றம் செய் யப்பட்டனர். வேலூர் மத்திய சிறையில் தண்ட னைக் கைதிகள், விசாரணைக் கைதி கள் என 900க்கும் மேற்பட்டோர் அடைக் கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறை யில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை, அடி தடி வழக்குகளில் கைதானவர்கள் மட் டுமே அடைக்கப்பட்டு வந்தனர். பிற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை சேலம் சிறையில் அடைக்க அனுமதிக்கவில்லை. இதனால் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த தண்டனைக் கைதி களும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலை யில், சென்னை புழல், வேலூர், திருச்சி, கோவை ஆகிய மத்திய சிறைகளை போன்றே சேலம் மத்திய சிறையிலும் தண்டனை கைதிகளை அடைக்கலாம் என்று சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 18 தண்டனைக் கைதிகள் தங்களை சேலம் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுப வித்து வந்த இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 18 கைதிகள், திங்களன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.