districts

img

மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீத போனஸ் உடன்பாடு

திருப்பூர், அக்.24 - திருப்பூர் மேற்கு, மங்க லம் பகுதி விசைத்தறி தொழி லாளர்களுக்கு 13.16 சதவீத போனஸ் வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.  மங்கலத்தில் புதன் கிழமை நடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தை யில், விசைத்தறி உரிமை யாளர்கள் சங்க தலைவர் கோபால், செயலா ளர் எம்.பழனிச்சாமி, துணைத் தலைவர் பி  வெங்கடாசலம், முத்துக்குமார் ஆகியோ ரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்க மாநிலத்  தலைவர் பி.முத்துசாமி, செயலாளர்கள்  வேலுச்சாமி, ஐ.என்.டி.யு.சி எம்.நடராஜ்,  துரைசாமி, எல்.பி.எஃப் நிர்வாகி சிவசாமி,  ஏ.டி.பி. நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம்  ஆகியோர் பங்கேற்றனர். மங்கலம் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள்  தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் நடப்பாண்டு விசைத்தறி தொழிலா ளர்களுக்கு 13.16 சதவீதம் போனஸ் வழங் குவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதனால்  மங்கலம் வட்டாரத்தில் விசைத்தறிக்கூடங் களில் வேலை செய்யும் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.