திருப்பூர், ஜன.24- பண்டைய கொங்கு மண்டல 24 நாடுக ளில், காங்கேய நாட்டில் தொன்மையான 12 கிராமங்கள் உள்ளன. இந்த பண்டைய கிராமங்களில் பார்புகழ் பழஞ்சேபளி என் றும், பரஞ்சேர்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சேர்வழியும் ஒன்று. காங் கேய வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர் வழியில் உள்ள மகாதேவர் நட்டுராமந்தர் என் னும் மத்தியபுரீஸ்வரர் மற்றும் வீரநாராய ணப் பெருமாள் கோவில்களில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறி யாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுச்சாமி ஆகி யோர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிபி 11 மற்றும் கிபி 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்களை கண்டறிந் துள்ளனர். இதைப் பற்றி ஆய்வு மையத்தின் இயக்கு னர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதா வது, காஞ்சி மாநதி என்னும் நொய்யல் ஆற் றின் தென் கரையிலும், சிவன்மலையிலி ருந்து செல்லும் ஓடையின் வடகரையிலும் அமைந்துள்ள ஊர் தான் பரஞ்சேர்வழி. பண் டைய கொங்கு மண்டலத்தில் சைவ, வைணவ மற்றும் சமணம் என மூன்று சம யங்களும் தழைத்து வளர்ந்த ஊர் பரஞ்சேர் வழி ஆகும்.
கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த கல்வெட்டு:
இங்குள்ள மத்திய புரீஸ்வரர் கோயிலின் அம்மன் சன்னதி முன்பு பாதி மண்ணில் புதைந் திருந்த பெரிய தூண் கல்லை திருப்பணியின் போது எடுத்து ஆய்வு செய்தபோது அதில் கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துக்களுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. “கிரந்த எழுத்து” வடமொழிக்கெனத் தமி ழர்கள் உருவாக்கியது ஆகும். தமிழர் களுக்கே சொந்தமானதும் தான் கிரந்த எழுத்து. இங்கு 220 செ.மீ உயரமும் 50 செ.மீ அகலமும் 20 செ.மீ கணமும் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுக ளும், கிரந்த எழுத்துக்களும் பொறிக்கப்பட் டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்து விளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களின் உய ரம் 60 செ.மீ ஆகும். இந்த கிரந்த எழுத்துக் களை வாசித்த இந்திய வரலாற்று பேரறிஞர், பேராசிரியர் முனைவர் ஒய்.சுப்பராயலு, நான்கு பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்பத் திரும்ப வருகின்றன என்றார். பொதுவாக இவ்வகைக் மந்திரக்கல்லைப் போற்றி வழிபட்டால் மக்களுக்கும், கால் நடைகளுக்கும் ஏற்படும் நோயை இது குணப் படுத்தும் என்பது நம்பிக்கை. எழுத்து அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்
கிபி 16ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு:
இங்குள்ள வீரநாராயண பெருமாள் கோயிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் மூன்று பக்கங்களிலும் தமிழ் எழுத்துக்கள் இருப்பதைக் காண முடிந்தது. 80 செ.மீ உயர மும், 50 செ.மீ அகலமும், 20 செ.மீ கணமும் கொண்ட இந்த கல்லில் மூன்று பக்கங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி இருப்பதை அறிய முடிகிறது. வேட்கோவர்களின் சிறப்பு: தமிழர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களிலும் இறை வனுக்கு படையல் மண்பானையிலேயே படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குய வர்களை, வேட்கோவர், வேள்கோ என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண் டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத் தில் 4 வரிகளுடன் கூடிய கல்வெட்டு உள்ளது. இது வேட்கோவர்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தியை கூறுகிறது. அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18 ஆம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணார்கள் இப்ப குதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது பரஞ்சேர்பள்ளி வீர நாராயணப் பெருமாளுக்குத் திருநந்தா தீபம் எரிப்பதற்கா கக் கூத்தார் சுங்கம் என்னும் வேட்கோவர் மண் பானை செய்யப் பயன்படும் ஒரு சக்கரத் துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை நந்தா தீபம் எரிப்பதற்கு கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது. இதன் மூலம் அன்று மண்பானைத் தொழில் சிறப்புற்று இருந்ததும் அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் அறிய முடிகி றது. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது இது கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந் தது ஆகும் என்று பொறியாளர் சு.ரவிக்குமார் கூறினார்.