districts

img

புரட்சியாளர் லெனின் 100 ஆவது நினைவு நாள்: திருப்பூரில் எழுச்சியுடன் கடைப்பிடிப்பு

திருப்பூர், ஜன.22- புரட்சியாளர் லெனினின் 100 ஆவது நினைவு தினம் திருப் பூர் மாவட்டம் முழுவதும் 43 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று எழுச்சியுடன் கடைப்பி டிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு ஒன்றியம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் பகுதி கிளைகள், அங்கேரிபாளையம், குரு வாயூர்யப்பன் நகர், ஆத்துப்பாளையம் ஆகிய கிளைகள்  சார்பில் மாமேதை லெனின் 100 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண் ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பி.கே.கருப்பசாமி, மகாலிங் கம், சந்தோஷ், ரேவந்த் உட்பட கிளைச் செயலாளர்கள் பலர்  பங்கேற்றனர். அதேபோல, தோழர் லெனின் நினைவு நாளை முன் னிட்டு வாலிபர் சங்கம் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் நரேந்திர பிரசாத் தலைமையில் அங்கேரிபாளையத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாணவர் சங்க மாநில  தலைவர் தெள.சம்சீர் அகமது, வாலிபர் சங்க வடக்கு ஒன் றிய துணைச் செயலாளர் லிவின் ஆகியோர் உரையாற்றி னர். முடிவில் பிரணவ் நன்றி கூறினார்.  தெற்கு மாநகரம்: தெற்கு மாநகரம் அரிசிக்கடை வீதி, கேவிஆர் நகர், ராயப் புரம், பட்டுகோட்ட்டையார் நகர் ஆகிய பகுதிகளில் மாமேதை லெனின் 100 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி  நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.உன் னிகிருஷ்ணன் உரையாற்றினார். தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், மாநகர குழு உறுப்பினர்கள் பி.பாலன், ஜி. செந்தில்குமார், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார், துணைத்தலைவர் சி. பெருமாள், சிஐடியு திருப்பூர் பொது தொழிலாளர் சங்க செய லாளர் என்.சுப்பிரமணியன், மாதர் சங்க மாநகரப் பொருளா ளர் விஜயா உட்பட கிளைச் செயலாளர்கள், வாலிபர் சங்க  நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தெற்கு ஒன்றியம்:

தோழர் லெனின் நினைவு நாளை முன்னிட்டு கட்சியின்  திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, மங் கலம், ராக்கியாபாளையம், ஜெயநகர் ஆகிய பகுதிகளில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், தெற்கு ஒன் றியச் செயலாளர் சண்முகம்,வேலுச்சாமி உட்பட  கிளை செயலாளர்கள் பலர் பங்கேற்றனர். வடக்கு மாநகரம்: ராமமூர்த்தி நகர், குமரானந்தபுரம், எம்.என்.நகர், முத்து நகர், பி.என்.பாளையம், ராஜீவ் நகர், பிட்ஜ்வே காலனி,  முருங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாமேதை லெனின்  நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி,  மாநகர குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், ஈ.வளர்மதி,  தமிழ்வாணன், பி.மனோகரன், துறை சம்பத் உட்பட கிளை  செயலாளர்கள் பலர் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக கட்சியின் மாநகர குழு உறுப்பினர்  தலைமையில் லெனின் நூற்றாண்டு நினைவு தின பேரவை  நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.  

உடுமலை நகரம்:

உடுமலை நகரக்குழு சார்பில் கட்சியின் அலுவலகத்தில்  புரட்சியாளர் மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினம்  கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் மதுசூதனன், மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர் தோழன் ராஜா, காந்தி சவுக் உட்பட கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 

உடுமலை ஒன்றியம்:
பள்ளபாளையம் நால் ரோட்டில் கட்சியின் கிளைச் செய லாளர் ரத்தினகுமார் தலைமையில் நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெக தீசன், குமரகுரு உட்பட கிளைச் செயலாளர்கள் பலர் பங் கேற்றனர். அதேபோல ஆலம்பாளையம் ஊராட்சி கட்சி கிளையின்  சார்பில் லெனின் நினைவு தினப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழு  உறுப்பினர் ஜெகதீசன் தலைமை வகித்தார், கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ் உரையாற்றினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரகுரு, தமிழ்த்தென் றல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவசுப்பிர மணி நன்றி கூறினார். இதே போல் உடுமலை தாலுகா மற் றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் லெனின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வேலம்பாளையம்:
 

15. வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் திலகர் நகர்,  வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர், சாமுண்டி புரம் ஆகிய கிளைப் பகுதிகளில் மாமேதை லெனின் 100  ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரக்  குழு செயலாளர் நந்தகோபாம், நகர குழு உறுப்பினர்கள் நவ பாலன், சின்னசாமி உட்பட கிளை செயலாளர்கள் பங்கேற் றனர். 

பொங்கலூர்:

பொங்கலூர் ஒன்றிய குழு அலுவலகத்தில் தோழர்  லெனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளர் பாலன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் சம்பத், பவித்ரா தேவி, விதொச ஒன்றி யச் செயலாளர் சுந்தரம் உட்பட கிளைச்செயலாளர் கள் பலர் பங்கேற்றனர்.