அவிநாசி மே.20- அவிநாசி அருகே உள்ள போத்தம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 13 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றது. அவிநாசி அருகே போத்தம்பாளை யம் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார் கள். அப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யில் 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இப்பள் ளிக்கு பெருமை சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது வரை 13 ஆண்டுகளாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கூறுகை யில், ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி இப்பள்ளியில் உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியும், 9ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் கற்று தரப்படுகிறது. மேலும் தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் டேக்வொண்டோ போன்றவை கற்றுத் தரப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் 2016 ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்ட அள வில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளியா கவும் திகழ்கிறது எனக்கூறினார். இப்பள்ளியில், ஒரு தலைமை ஆசிரி யர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். பள்ளியில் 10ஆம் வகுப்பு துவங்கிய ஆண்டு முதல் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டிய பள்ளி என்கிற பெருமையை பெற்று உள்ளது. இந்த ஆண்டு 30 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ள னர்.