தருமபுரி, ஏப்.28- அனைத்து ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றி யத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நிழற் கூடம், குடிநீர், மருத்துவ வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன் றிய தலைவர் டி.ஜடையாண்டி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் எம். முத்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் கே.குமரேசன், பொரு ளாளர் பி.வீரப்பன், ஒன்றிய துணைத் தலைவர்கள் எம்.தங்கராஜ், சொக்க லிங்கம் மற்றும் சென்னு, ஸ்டாலின் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.